போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், சூதாட்டம், கடன் முதலை பிரச்சினை, மோசடி என பல்வேறு குற்றங்களின் தொடர்பில் 156 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு வார காலமாக நடைபெற்ற போலிஸ் நடவடிக்கையில் இவர்கள் பிடிபட்டதாக நேற்று போலிசார் தெரிவித்தனர்.
பிடிபட்டவர்களில் 132 பேர் ஆடவர்; 24 பேர் பெண்கள். சந்தேக நபர்கள் 17 முதல் 81 வயது வரையிலானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவற்றின் ஆதரவுடன் ஜூரோங் போலிஸ் பிரிவின் தலைமையில் அதிகாரிகள் இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஜூரோங் வெஸ்ட், துவாஸ், சுவா சூ காங், புக்கிட் பாஞ்சாங், புக்கிட் பாத்தோக் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஐந்து ஆடவர்கள் சுங்கச் சட்டம் மற்றும் குடிநுழைவு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை, வரி செலுத்தப்
படாத சிகரெட் பொட்டலங்கள் போன்றவையும் பிடிபட்டன.

