$526 மில்லியன் ஒப்பந்தம்

$526 மில்லியன் ஒப்பந்தம்

2 mins read
201a6e04-4600-44f4-a7ab-9a06bb1794c8
ஜூரோங் வட்டாரப் பாதையில் அமையும் நன்யாங் கேட்வே ரயில் நிலையம், ஓவியரின் கைவண்ணத்தில். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம் -

ஜூரோங் வட்டாரப் பாதையில் நான்கு ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்

ஜூரோங் வட்­டா­ரப் பாதை­யில் அமை­யும் மேலும் நான்கு எம்­ஆர்டி ரயில் நிலை­யங்­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் நடப்­புக் காலாண்­டில் தொடங்­க­வுள்­ளன.

அந்­நான்கு நிலை­யங்­களும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் மற்­றும் ஜூரோங் நக­ராண்­மைக் கழக தொழி­ல­கப் பகு­திக்­குச் சேவை­யாற்­றும்.

இதன் தொடர்­பில் தலா $263 மில்­லி­யன் மதிப்­பி­லான இரு ஒப்­பந்­தங்­களை நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று வழங்­கி­யது. நான்கு ரயில் நிலை­யங்­க­ளின் வடி­வமைப்பு, கட்­டு­மா­னம் மற்­றும் அவற்­று­டன் தொடர்­பு­டைய மேம்­பா­லச் சாலைப் பணி­களை அந்த ஒப்­பந்­தங்­கள் உள்­ள­டக்­கி­யுள்­ளன.

ஜூரோங் வட்­டா­ரப் பாதை­யின் மூன்­றாம் கட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக அந்­நி­லை­யங்­கள் அமை­ய இ­ருக்­கின்­றன. ஜூரோங் வட்­டா­ரப் பாதை­யின் மூன்­றாம் கட்­டப் பணி­கள் வரும் 2029ஆம் ஆண்­டில் நிறை­வு­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜூரோங் ஹில், ஜூரோங் பியர் எனத் தற்­கா­லி­க­மா­கப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இரண்டு நிலை­யங்­கள், ஜூரோங் பியர் சாலை­யைச் சுற்­றி­ இருக்கும் தொழி­ல­கப் பகு­திக்கு சேவை­யாற்­றும். நன்­யாங் கேட்வே, நன்­யாங் கிர­சென்ட் எனும் மற்ற இரு நிலை­யங்­க­ளும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தி­னுள் அமை­யும்.

கட்டி முடிக்­கப்­பட்­ட­தும் அந்த ­நான்கு புதிய நிலை­யங்­க­ளால் பயணிக­ளின் பயண நேரம் 30 நிமி­டம் வரை குறை­ய­லாம்.

ஜூரோங் ஹில், ஜூரோங் பியர் நிலை­யங்­கள், ஜூரோங் பியர் சாலை­யின் வழியே அவ்­விரு நிலை­யங்­க­ளுக்கு இடையே அமை­யும் 1.1 கி.மீ. நீள மேம்­பா­லச் சாலை ஆகி­ய­வற்­றுக்­கான ஒப்­பந்­தம், சிங்­கப்­பூ­ரின் 'எஸ்­சிபி கட்­டு­மான நிறு­வனம்' மற்­றும் 'சீனக் கட்­ட­டப் பொறி­யி­யல் கட்­டு­மான நிறு­வ­னம் (சிங்­கப்­பூர் கிளை)' ஆகி­ய­வற்­றின் கூட்டு நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இரண்­டா­வது ஒப்­பந்­த­மா­னது நன்­யாங் கேட்வே, நன்­யாங் கிர­சென்ட் நிலை­யங்­கள் மற்­றும் அவற்­றுக்கு இடை­யி­லான 1.4 கி.மீ. மேம்­பா­லச் சாலை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கு­கிறது. அந்த ஒப்­பந்­தம் 'ஹுவே செங் பில்­டர்' எனும் உள்­ளூர் நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்டுள்­ளது.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக ஜூரோங் வட்­டா­ரப் பாதை கட்­டு­மா­னப் பணி­கள் கிட்­டத்­தட்ட ஓராண்டு காலம் தாம­த­மா­னது. அப்­பாதை 2027ஆம் ஆண்­டில் இருந்து 2029க்குள் கட்­டம் கட்­ட­மா­கத் திறக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் ஏழா­வது எம்­ஆர்டி பாதை­யான ஜூரோங் வட்­டா­ரப் பாதை நிலத்­தடி ரயில் நிலை­யங்­களையே கொண்­டி­ராது.

பணி­கள் நிறை­வ­டைந்­த­பின் அப்­பாதை 24 நிலை­யங்­க­ளை­யும் சுவா சூ காங், பூன் லே, ஜூரோங் ஈஸ்ட் ஆகிய மூன்று நிலை­யங்­களில் சந்­திப்பு நிலை­யங்­க­ளை­யும் கொண்­டி­ருக்­கும்.