தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'அடுத்த தலைவர் தேர்ந்தெடுப்பதை மறுஆய்வு செய்யும் வாய்ப்பு 4ஜி குழுவுக்கு வேண்டும்'

2 mins read
1f2bb480-e4b9-4b33-898a-a144d6ed7c64
-

மக்­கள் செயல் கட்­சி­யின் (மசெக) '4ஜி' தலை­வர்­கள் குழு­வின் தலை­மைப் பத­வி­யி­லி­ருந்து துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வில­கி­ய­தைத் தொடர்ந்து அடுத்த தலை­மைத்­து­வம் குறித்து ஒட்­டு­மொத்­த­மா­கப் பரி­சீ­லிக்க வாய்ப்பு வழங்­கப்­பட வேண்­டும் என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

இந்த செயல்­முறை யார் சிறந்­த­வர் என்­ப­தற்கு அப்­பாற்­பட்­டது. தனித்­தனி அங்­க­மா­கச் செயல்­ப­டு­வ­தைத் தாண்டி, ஒரு குழு­வாக சிறந்து செயல்­ப­டு­வதை உறுதி செய்­யும் சிறந்த தலை­வ­ரைத் தேர்வு செய்ய வேண்­டு­மென மசெக தலை­வர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

கட்­சி­யின் இரண்­டா­வது இரண்­டாம் தலை­மைச் செய­லா­ள­ரா­க­வும் துணைப் பிர­த­மர் ஹெங்­கிற்கு அடுத்­த­நி­லை­யி­லும் உள்ள நீங்­கள் அடுத்த தலை­வ­ராக வரு­வீர்­களா என்று நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு திரு சான் இவ்­வாறு பதி­ல­ளித்­தார்.

அடுத்த தலை­வர் ஏக மன­தாக காலப்­போக்­கில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார் என்று கூறிய திரு சான், எங்­க­ளது தலை­மைத்­து­வத் தேர்­வுத் திட்­டம், தலை­வர் ஒரு­வரை மட்­டும் தேர்ந்­தெ­டுப்­ப­தை­யும் தாண்டி, சிங்­கப்­பூர் வலு­வான ஒரு குழு­வைக் கண்­ட­றி­வ­தில் உள்­ளது என்­றார்.

இத­னால் சிங்­கப்­பூர் சவால்­களை எதிர்­கொண்டு, உயிர்­வாழ்­வது மட்­டு­மல்­லாது செழிப்­பான வளர்ச்சி காண்­ப­தற்­கும் சிறந்த வாய்ப்பு உள்­ளது என்று அவர் கூறி­னார்.

தலை­மைத்­து­வப் பத­விக்கு தகு­தி­யா­ன­வர் குறித்த கேள்­விக்­குப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங்­கும், இது ஒரு தலை­வரை மட்­டுமே தேர்ந்­தெ­டுப்­ப­தல்ல என்ற திரு சானின் கருத்­தையே பிர­தி­ப­லித்­தார். தலை­மைத்­து­வக் குழு எவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயல்­பட முடி­யும் என்­பதை அடிப்­ப­டை­யில் பார்ப்­பது மசெக வழி என்று திரு ஓங் கூறி­னார்.

"வழக்­க­மான பந்­த­யத்­தி­லி­ருந்து இது வேறு­பட்­டது. முடி­வில், கழுத்­தில் ஒரு பதக்­கத்­து­டன் ஒரே ஒரு வெற்­றி­யா­ளர் மட்­டுமே மேடை­யில் இருப்­பார். இது ஒரு குழு எனும் முழு அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் களத்­தில் பணி­யாற்­று­வ­தா­கும். இதில் வெற்­றி­பெற்­றால், நாட்­டுக்கு பெருமை கிடைக்­கும். அப்­ப­டிப்­பட்ட ஒரு குழு­வின் தலை­வ­ராக இருப்­ப­வர், அணி­யில் இருப்­ப­வர் ஒவ்­வொ­ரு­வ­ரது செயல்­தி­றனை வெளிக்­கொ­ணர்­வார்," என்­றார் திரு ஓங்.

"எனவே ஒரு வலு­வான அணியை உரு­வாக்­கு­வ­தற்கு, அதில் முதன்­மை­யாக விளங்­கு­ப­வர் பின்­னால் அணி­வ­குப்­ப­தற்­கும் சிறிது காலம் எடுக்­கும். இப்­போ­து­தான் ஒரு பெரிய மாற்­றத்தை அறிந்­துள்­ளோம். எனவே மீண்­டும் ஒருங்­கி­ணைக்க எங்­க­ளுக்கு சிறிது காலம் தேவை. இதில் உங்­கள் புரிந்­து­ணர்­வை­யும் ஆத­ர­வை­யும் நாடு­கி­றோம்," என்று அமைச்­சர் ஓங் கூறி­னார். கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து சிங்­கப்­பூர் வலு­வு­டன் மீண்டு வரு­வதை உறுதி செய்­வ­தில் நான்­காம் தலை­மைத்­து­வக் குழு தொடர்ந்து கவ­னம் செலுத்­தும் என்று திரு சான் கூறி­னார்.

"எங்­க­ளுக்கு எவ்­வாறு சொல்­லித்­த­ரப்­பட்­டதோ, எவ்­வாறு விளக்­கிக் கூறப்­பட்­டதோ, முந்­தைய தலை­முறை தலை­வர்­கள் அனை­வ­ரும் முன்­னு­தா­ர­ண­மாக இருந்­தார்­களோ அதே­போல், எந்­த­வொரு முடிவை எடுப்­ப­தி­லும் குழு­வில் உள்ள அனை­வ­ரும் தொடர்ந்து சிங்­கப்­பூ­ருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நலன்­க­ளுக்­குமே முக்­கி­யத்­து­வம் கொடுப்­போம்," என்று அவர் கூறி­னார்.