செல்லப்பிராணி கடையில் தீ; 19 நாய்க்குட்டிகள் மீட்பு

1 mins read
f0edf256-55ef-4c75-945d-17084e1a1530
தீப்பற்றிய கடையிலிருந்து மீட்கப்பட்ட நாய்க்குட்டிகளுக்கு தண்ணீர் அளித்துப் பராமரித்த வழிப்போக்கர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

அப்­பர் தாம்­சன் ரோட்­டில் அப்­பர் தாம்­சன் எம்­ஆர்டி நிலை­யம் கட்­டத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த இடத்­துக்கு அரு­கில் இருக்­கும் செல்­லப்­

பி­ராணி கடை­யில் நேற்று காலை 19 நாய்க்­குட்­டி­களை தீய­ணைப்­பா­ளர்­கள் மீட்­ட­னர்.

புகை வெளி­யே­றிக்­கொண்­டி­ருந்த கடை­யி­லி­ருந்து பெட்­டி­களில் நாய்க்­குட்­டி­கள் வெளி­யில் கொண்டு­ வ­ரப்­பட்­ட­தா­க­வும் அந்த வழி­யா­கச் சென்­ற­வர்­கள் நாய்க்­குட்­டி­க­ளைப் பராமரிக்க உத­வி­ய­தா­க­வும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.

எண் 197 அப்­பர் தாம்­சன் ரோட்­டில் தீப்­பற்­றி­ய­தாக நேற்று அதி­காலை 1.15 மணி­ய­ளவில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு தக­வல் கிடைத்­தது.

வெல்­ஃபோண்ட் பெட்ஸ் எனும் செல்­லப்­பி­ராணி கடை அந்த இடத்­தில் உள்­ளது.

பூட்டை உடைத்து கடைக்­குள் சென்ற தீய­ணைப்­பா­ளர்­கள் தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்து தீயை அணைத்­த­னர்.

நாய்க்­குட்­டி­களைப் பராமரிக்க உத­வி­ய­வர்­க­ளுக்கு தீய­ணைப்­

பா­ளர்­கள் நன்றி தெரி­வித்­துக்­கொண்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தில் 19 நாய்க்­குட்­டி­கள் அந்­தக் கடை­யி­லி­ருந்து மீட்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. உயி­ரி­ழப்­பு­களோ, காயங்­களோ பதி­வா­க­வில்லை என ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

அந்­தக் கடைக்­குள் இருந்த மின்­சா­த­னம் ஒன்­றின் கார­ண­மாக தீ மூண்­டி­ருக்­க­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சம்பவத்தின் தொடர்பில் விசா­ரணை தொடர்­கிறது.