தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேலாங் சிராயில் நோன்புப் பெருநாள் ஒளியூட்டு; இணையச் சந்தையும் தொடங்கியது

1 mins read
2b1c97ac-1016-44fa-bae1-c1d5c6a29dd3
கேலாங் சிராயில் நோன்புப் பெருநாள் ஒளியூட்டை நேற்று முன்தினம் இரவு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (முன்வரிசை நடுவில்) தொடங்கி வைத்தார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கேலாங் சிரா­யில் நோன்­புப் பெரு­நாள் ஒளி­யூட்டு நிகழ்ச்சி நேற்று முன்­தி­னம் நடைபெற்றது. அதே குதூ­க­லத்­து­டன் இணை­யச் சந்­தை­யும் தொடங்­கி­விட்­டது.

ரம­லான் மாதம் வரும் 13ஆம் தேதி தொடங்கி மே 12 வரை நீடிக்­க­வுள்ள நிலை­யில் ஒளி­வெள்­ள­மும் அலங்­கா­ர­மும் மே 23 வரை இருக்­கும் என்று கூறப்­பட்­டது.

'நம் கம்­பத்து உணர்­வைக் கொண்­டா­டு­வோம்' என்ற கருப்­பொ­ரு­ளில் இவ்­வாண்­டின் ஒளி­யூட்டு அமைந்­துள்­ளது.

வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று ஒளி­யூட்­டைத் தொடங்கி வைத்த துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், கடந்த ஆண்டு சவால்­களில் இவ்­வாண்­டின் ஒளி­யூட்டு மேலும் பொருள் நிறைந்­த­தா­கி­யுள்­ள­தாகக் கூறி­னார்.

முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரான மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர்­கள் மாலிக்கி ஒஸ்­மான் மற்­றும் டான் சீ லேங் ஆகி­யோ­ரு­டன் நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின்­னும் ஒளியூட்டு நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில் சிம்ஸ் அவென்யூ மற்­றும் சாங்கி ரோட்­டில் அமைந்­துள்ள இரு பிர­தான வளை­வு­கள், ஒளி­யூட்­டின் மையப் பகு­தி­க­ளாக திகழ்­வ­தா­கக் கூறப்­பட்­டது.

விஸ்மா கேலாங் சிராய், சிங்­கப்­பூர் மலாய் வர்த்­தக தொழில் சபை­யு­டன் இணைந்து வரு­டாந்­திர இணை­யச் சந்­தைக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

வழக்­க­மான தெருச்­சந்­தை­கள், கொவிட்-19 கொள்­ளை­நோய் கருதி இவ்­வாண்டு 'Bazaar-Kita.sg' என்ற இணை­யச் சந்­தை­யாக மாறி­விட்­டது.

பல­கா­ரங்­கள், உண­வு­வ­கை­கள், ஆடை அணி­கள் போன்­ற­வற்றை 24 மணி­நே­ர­மும் வாங்­கும் வச­தியை இணை­யத்­த­ளம் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­துள்­ளது.