பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு சேவை ஏப்ரல் 14ஆம் தேதியன்று நடைபெறும் என்று பக்கிங்கம் அரண்மனை தெரிவித்தது.
இளவரசர் ஹேரி இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசர் பிலிப்புக்காக நீண்ட காலமாக உறுதி செய்யப்பட்ட இறுதிச் சடங்கு திட்டங்கள் கொவிட்-19 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மாற்றப்பட்டுள்ளன.
இளவரசர் பிலிப், தமது 99 வயதில் காலமானார். இவரது இறுதிச் சடங்கில் பொது ஊர்வலம் நடத்தப்படமாட்டாது.