அதிபர்: ரமலான் வாழ்த்துகள்; தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

அதிபர்: ரமலான் வாழ்த்துகள்; தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

1 mins read
499429cf-12c2-4b4d-8497-6e8b35ba0c55
-

ரம­லான் மாதம் இன்று முதல் தொடங்­கி­னா­லும் கொரோனா தொற்­றுக் காலத்­துக்கு முந்­தைய ஆண்­டு­க­ளைப்­போல பெரிய திரு­வி­ழா­வாக அது இருக்­காது என்­றும் தொற்­றுப் பர­வல் இன்­னும் முடிந்­து­வி­ட­வில்லை என்­ப­தால் மிக­வும் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்றும் அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.

கொரோனா கிரு­மிக்கு எதி­ரான போரில் நமது பங்­கைத் திறம்­பட ஆற்­றி­னால், அடுத்த ஆண்டு ரம­லான் மாதத்­தில் கூடு­தல் நட­வ­டிக்­கை­களை எதிர்­பார்க்­க­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

இன்று முதல் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை ரம­லான் நோன்­பும் மே மாதம் 13அம் தேதி நோன்புப் பெருநாளும் கொண்­டா­டப்­ப­டு­கிறது. மூக்­கின் வழி­யாக எச்­சில், சளி மாதிரி பரி­சோ­தனை செய்­வது ரம­லான் மாத நோன்­புக்கு பங்­கம் விளை­விக்­காது என சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் குறிப்­பிட்­டதை வலி­யு­றுத்­திய அதி­பர் ஹலிமா, வாய்ப்புக் கிடைக்­கும்­போது தங்­க­ளது தடுப்­பூ­சிக்­காக பதிவு செய்­து­கொள்­ள முஸ்­லிம்­களை ஊக்­கு­விப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு ரமலான் கூட்டுத் தொழுகைகளை முஸ்லிம்கள் மேற்கொள்ளலாம் என்றும் அவற்றுக்கு இணையம் வழியாக பதிவு செய்வது அவசியம் எனவும் அதிபர் குறிப்பிட்டிருந்தார். பள்ளிவாசல் நிகழ்வுகள், 'ஸக்காத் ஃபித்ரா'வுக்கு பணம் செலுத்துவது போன்றவற்றை இணையம் வழி செய்யவும் அவர் ஊக்குவித்தார்.

நேற்று மாலை சூரியன் மறைந்து 16 நிமிடங்களுக்குப் பிறகு பிறை தென்பட்டதை அடுத்து இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் நஸிருதின் முகமது நாசிர் அறிவித்தார்.