தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி தம்
முடைய 63 வயது தாயாருடன் ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் 27 வயதான திருவாட்டி சிட்டி ரொஹானிஸா முஹம்மது.
திடீரென கால்களின் வழியே ரத்தம் வழிந்தோடியதைக் கண்டதும் பிரச்சினையைப் புரிந்துகொண்ட அவருக்கு, தம் கருவிலிருந்த குழந்தையைப் பற்றிய கவலை மேலோங்கியது.
கர்ப்பிணியான திருவாட்டி சிட்டிக்கு ரத்தசோகை, கருக்கொடி பிரச்சினை இருந்தது முந்தைய கர்ப்பத்தின்போதும் இருந்தது. உடனே ரயில்நிலைய அதிகாரி
களின் உதவியை நாடினார் திருவாட்டி சிட்டியின் தாயார் ரோஸ்னா இதாம்.
அவசர சிகிச்சை வாகனத்தை வரவழைத்து திருவாட்டி சிட்டியை பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் நிலைய அதிகாரிகள். அதுவரை திருவாட்டி சிட்டியையும் அவரது தாயாரையும் பதற்றமின்றி பார்த்துக்கொள்ளவும் அதிகாரிகள் உதவினார்கள்.
குறைமாதப் பிரசவம் என்பதால் குழந்தை சற்று சிறியவனாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இருக்கிறான் என்று, குழந்தையையும் திருவாட்டி சிட்டியையும் பார்க்க கடந்த 8ஆம் தேதி வீட்டுக்குச் சென்ற சென்ற அதிகாரிகளிடம் திருவாட்டி ரோஸ்னா கூறினார்.
இதுபோல சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார் தெம்பனிஸ் எம்ஆர்டி நிலைய மேலாளர் ஆலன் லிம்.