பலனடைந்துள்ள 9,500 பேர்

பலனடைந்துள்ள 9,500 பேர்

2 mins read
6b44fa4f-2ed9-4908-af4a-499df25e9159
'புருடென்ஷியல் சிங்கப்பூரில்' பயிற்சி பெறுபவர்களையும் ஊழியர்களையும் நேற்று சந்தித்துப் பேசிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அண்­மை­யில் பட்­ட­தா­ரி­க­ளான ஏறத்­தாழ 7,600 பேர் எஸ்­ஜி­யு­னை­டெட் பயிற்­சித் திட்­டத்­தில் பங்­கெ­டுத்­துள்­ள­னர்.

எஸ்­ஜி­யு­னை­டெட் நடுத்­தர வய­தி­ன­ருக்­கான வேலைப் பாதை திட்­டத்­தில் 1,900 நடுத்­தர வயது ஊழி­யர்­கள் பங்­கெ­டுத்­த­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் கடந்த ஆண்டு வேலை வாய்ப்­பு­கள் வெகு­வா­கக் குறைந்­தன.

இந்த நிலையை எதிர்­கொள்ள இந்த இரு திட்­டங்­களும் அறி­

மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

கடந்த பிப்­ர­வரி மாதம் இறுதி நில­வ­ரப்­படி, இத்­திட்­டங்­க­ளின்­கீழ் பயிற்சி பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போதே கிட்­டத்­தட்ட 200 பேருக்கு முழு­நேர வேலை கிடைத்­த­தாக மனி­த­வள அமைச்­சும் சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யும் நேற்று கூறின.

மேலும் 160 பேர் பயிற்­சித் திட்­டங்­களை முடித்­து­விட்­ட­னர்.

இந்த இரு திட்­டங்­க­ளி­லும் ஏறத்­தாழ 2,500 அமைப்­பு­கள் பங்­கெ­டுத்­துள்­ளன. அவற்­றில் அர­சாங்க அமைப்­பு­களும் அடங்­கும்.

திட்­டங்­களில் பங்­கெ­டுப்­ப­வர்­

க­ளுக்கு இந்த அமைப்­பு­கள் பயிற்சி அல்­லது வேலை அனு­பவ வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளன.

திட்­டத்­தில் பங்­கெ­டுத்­துள்ள பத்­தில் ஒன்­பது அமைப்­பு­கள் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வாய்ப்­பு­களை தக­வல்­

தொ­டர்பு தொழில்­நுட்­பம் மற்­றும் ஊட­கம், நிதிச் சேவை­கள், நிபு­ணத்­து­வச் சேவை­கள் ஆகிய துறை­கள் வழங்­கு­கின்­றன.

அடுத்த சில மாதங்­களில் மேலும் 15,000 பயிற்சி, வேலை அனு­பவ வாய்ப்­பு­கள் வழங்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக மனி­த­வள அமைச்­சும் சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யும் தெரி­வித்­தன. வேலை­யின்மை விகி­தம் குறைந்து வரும் நிலை­யில் வேலை விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் சற்று குறைந்­தி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி கூறி­யது.

குறைந்­தது ஒரு பயிற்சி அல்­லது வேலை அனு­பவ வாய்ப்­பைப் பெற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதி பேர் அதை ஏற்க மறுத்­த­னர்.

நடுத்­தர வயது ஊழி­யர்­க­ளைக் காட்­டி­லும் பெரும்­பா­லும் புதிய பட்­ட­தா­ரி­களே அவ்­வாறு செய்­த­னர்.

மற்­றொரு பயிற்­சித் திட்­டம் அல்­லது முழு­நேர வேலை கிடைத்­ததே அதற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­தது.

இந்­நி­லை­யில், எஸ்­ஜி­யு­னை­டெட் பயிற்­சித் திட்­ட­மும் எஸ்­ஜி­யு­னை­டெட் நடுத்­தர வய­தி­ன­ருக்­கான வேலைப் பாதை திட்­ட­மும் நீட்­டிக்­கப்­பட்டு மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு பயிற்­சித் திட்­டங்­கள், வேலை அனு­பவ வாய்ப்­பு­கள் ஆகி­ய­வற்றை வழங்­கும் நிறு­வ­னங்­கள் நிதி ஆத­ர­வுக்­குத் தகுதி பெறு­கின்­றன.

இம்­மா­தம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து தொழில்­நுட்­பக் கல்­விக் கழக சான்­றி­தழ் பெற்­ற­வர்­கள், பட்­ட­யச் சான்­றி­தழ் பெற்­ற­வர்­கள் ஆகி­யோ­ருக்­கான பயிற்­சிப் படித்­தொகை உயர்த்­தப்­பட்­டுள்­ளன.

வேலை தேடும் 40 வய­துக்­கும் மேற்­பட்ட நடுத்­தர வய­தி­ன­ருக்­கு­மான பயிற்­சிப் படித்­தொகை உயர்த்­தப்­பட்­டுள்­ளது.