இன்னும் சில ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் தானியங்கி முறையால் மதிப்பீடு செய்யப்படக்கூடும்.
அதில் தேர்ச்சி பெறுபவர்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவர்.
அதற்கு முன்பு தானியங்கி முறைக்கான சோதனைமுறை நடத்தப்படுகிறது. சோதனைமுறை வெற்றிகரமாக அமைந்தால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்பவர்களை மதிப்பீடு செய்யும் முழுமையான தானியங்கி முறையை ஏற்று நடத்தும் நிறு
வனத்தைத் தேர்வு செய்ய ஏலக்குத்தகைக்கு உள்துறை அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
தற்போது அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த முறை கூடிய விரைவில் மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கான 2, 2A, 2B ஆகிய பிரிவுகளை முழுமையான தானியங்கி முறையைக் கொண்டு மதிப்பீடு செய்ய சோதனைமுறை நடத்தப்படும் என்று ஏலக்குத்தகை ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
முழுமையான தானியங்கி மதிப்பீட்டு முறையில் உணர்கருவிகளும் கேமராக்களும் பயன்படுத்தப்படும். புதிய மதிப்பீட்டு முறையை நடத்த தேர்வு செய்யப்படும் நிறுவனம், உட்லண்ட்ஸ் தொழிற் பூங்காவில் உள்ள எஸ்எஸ் டிசி வாகனம் ஓட்டும் பள்ளியில் முழுமையான தானியங்கி மதிப்பீட்டு முறையை பொருத்த வேண்டும். மோட்டார் சைக்கிள் மதிப்பீட்டு முறையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகள் அனைத்தையம் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தால் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் தானியங்கி முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
தேர்வு செய்யப்படும் தானியங்கி மதிப்பீட்டு முறை குற்றப் புள்ளிகள் வழங்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது மொத்த குற்றப் புள்ளிகளைக் கணக்கிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இந்த தானியங்கி மதிப்பீட்டு முறை குறித்து சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் முதன்முதலில் 2017ஆம் ஆண்டில் அறிவித்தார். இதற்கான சோதனைமுறை இவ்வாண்டு நடைபெறும் என்றும் புதிய மதிப்பீட்டு முறை 2023ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாகனங்கள் ஓட்ட கற்றுக்
கொடுக்கும் வகுப்புகளை நடத்தவும் மதிப்பீடு செய்யவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது அது வகுப்பின் தரத்தை உயர்த்துகிறது என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். சோதனைமுறை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சு பதிலளிக்கவில்லை. அதுகுறித்து எஸ்எஸ்டிசியைச் சேர்ந்த மேலாளரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

