15,000 டன் வெள்ளிக் கட்டிகளை வைக்க ஏதுவான பெட்டகத்தை சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் புல்லியோன் உருவாக்கி வருகிறது. அந்தப் பெட்டகம் சாங்கி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஆறு மாடி உயர சரக்குக் கிடங்கில் உள்ளது.
தற்போது அந்தப் பெட்டகத்தில் ஏறத்தாழ 400 டன் வெள்ளிக் கட்டிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19 நெருக்கடிநிலை யின்போது வெள்ளியின் விலை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.