மீண்டும் திரும்பிய புத்தாண்டு உணர்வு

மீண்டும் திரும்பிய புத்தாண்டு உணர்வு

2 mins read
a8b73b02-6d11-4a34-9372-713c8d535868
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று மாலை கேம்பல் லேனில் திரளத் தொடங்கிய மக்கள். படம்: தமிழ் முரசு -

எஸ்.வெங்கடேஷ்வரன்

கடந்த ஆண்டு நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பிலிருந்­த­தால் வழக்­கம்­போல சித்­தி­ரைப் புத்­தாண்டைக் கொண்­டாட முடி­யாத சூழல் ஏற்­பட்­டது.

கொவிட்-19 தொற்றுச் சூழல் சீராகி வருவதால் புத்தாண்டை கொண்டாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது என்றார் தேக்காவிற்கு நேற்று குடும்பத்துடன் வந்திருந்த திரு சுரேந்திரன் வடிவேலு, 43.

"சித்திரைப் புத்தாண்டிற்கு வீட்டில் பொங்கலிட்டு, கடவுளை வழிபட்டு, கொண்டாட உள்ளோம். தேக்காவிற்கு வந்து பலகாரம், காய்கறி, உணவுப் பொருள்கள் வாங்கியுள்ளோம்," என்றார் திரு சுரேந்திரன்.

புனித ரமலான் மாதத் தொடக்கம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியப் புத்தாண்டுகள், வட இந்தியர்கள் கொண்டாடும் வசந்த நவராத்திரி ஆகிய பல பண்டிகைகள் ஒன்றாக வருவது நல்ல அறிகுறி என்றார் திரு அருண்பாண்டியன், 52.

"கடந்த ஆண்டு புத்­தாண்டு காலத்­தில் மக்­கள் கொரோனா தொற்­றுக்­குப் பயந்து பீதி­யில் இருந்­த­னர். பாது­காப்பு விதி­மு­றை­களைக் கடைப்­பி­டிக்கும்படி வலி­யு­றுத்தியபடியே இருக்க வேண்­டி­ இருந்­தது. வியா­பா­ர­மும் குறை­வாக இருந்­தது. ஆனால் இவ்­வாண்டு மக்­கள் தேக்கா கடை­க­ளுக்கு நிம்­மதி­யாக வரு­கின்­ற­னர். வியா­பா­ர­மும் கொஞ்­சம் முன்­னே­றி­யுள்­ளது," என்­றார் ஜோதி புஷ்­பக் கடை­யின் திரு ராஜ்­கு­மார் சந்­திரா.

"கடந்த சில ஆண்­டு­க­ளை­விட வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வருகை சற்று குறைந்­து­தான் இருக்­கிறது. இருந்­தா­லும் புத்­தாண்டு உணர்வு மேலோங்­கியே உள்­ளது," என்­றார் அப்­போலோ செல்­லப்­பாஸ் கடை நிர்­வாகி திரு சாரங்­க­பாணி ராஜ­சந்­தி­ரன், 37.

விலைவாசி ஏறுமுகம்

உள்­ளூர்­வா­சி­கள் வருகை ஓர­ளவு­அதி­க­ரித்­துள்ள நிலை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வரா­மல் இருப்­பது, விமா­னத்­துறை முடக்­கம் ஆகி­யவை தொடர்ந்து வர்த்­த­கத்­தைப் பாதித்து வரு­கின்­றன என்று லிட்­டில் இந்­தி­யா­வின் சில பூ, காய்­கறிக் கடை­கள் தெரி­வித்­துள்­ளன.

"வழக்­க­மான விமா­னப் போக்கு ­வ­ரத்து இல்­லா­த­தால் பூக்­க­ளைக் குறிப்­பிட்ட சரக்கு விமா­னங்­களில் மட்­டுமே இறக்­கு­மதி செய்ய முடி­கிறது. அத­னால் பூக்­க­ளின் விலை­யும் அதி­க­ரித்­துள்­ளது. எடுத்­துக்­காட்­டாக, ஐந்து வெள்ளி பூமா­லை­யின் விலை எட்டு, ஒன்­பது வெள்ளி­யாக உயர்ந்­து­விட்­டது. அதி­க­மான விலைக்கு விற்­றால் மக்­களும் வாங்­க­மாட்­டார்­கள். வாடிக்­கை­யாளர் வரு­கை­யும் முன்­­போல இல்லை. எஸ்-பாஸ் ஊழி­ய­ருக்­கான ஊதிய வரம்­பும் அதி­க­ரித்­துள்­ள­தால் லாபம் பார்ப்­பது கடி­னம்," என்­றார் கல்­யாணி பூக்­கடை உரி­மை­யா­ளர் திரு வேலுச்­சாமி, 66.

லிட்­டில் இந்­தி­யா­விற்கு வரும் புதிய வரத்து காய்­க­றி­களில் 70 விழுக்­காட்­டிற்­கும் மேல் தமிழ்­நாட்­டின் திருச்சி, சென்னை நக­ரங்­களில் இருந்து வரு­வ­தாக தேக்கா சந்தை வணி­கர்­கள் தெரி­வித்­த­னர். கொவிட்-19 நோய்ப் பர­வல் கார­ண­மாக கடந்த ஆண்டு மார்ச்­சில் இருந்து காய்­க­றி­க­ளின் விலை குறைந்­தது மூன்று மடங்கு அதி­க­ரித்­து­விட்­ட­தாக சிங்­கப்­பூர் வணி­கர்­கள் கூறு­கின்­ற­னர்.