வெளிநாட்டு முஸ்லிம் ஊழியர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

வெளிநாட்டு முஸ்லிம் ஊழியர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

2 mins read
1e9e2653-0255-4c49-9885-5f03e075df3b
சுவா சூ காங் குரோவ் விரைவுக் கட்டுமான தங்குவிடுதி வெளிநாட்டு முஸ்லிம் ஊழியர்களுக்கு நேற்று அதிகாலையில் உணவுப் பொட்டலங்களை வழங்கினார் மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (வலமிருந்து இரண்டாவது). படம்: திமத்தி டேவிட் -

புனித ரம­லான் மாதம் நேற்று தொடங்­கிய நிலை­யில் சிங்­கப்­பூர் முழு­வ­தும் முஸ்­லிம்­கள் நேற்று முதல் நோன்­பி­ருக்­கத் தொடங்­கி­விட்­ட­னர். அவ்­வ­கை­யில், நேற்­றுக் காலை 'சகர்' உணவுண்டு, நோன்பு தொடங்கு ­முன் மனி­த­வள, தற்­காப்பு துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­ம­தும் தொண்­டூ­ழி­யர்­கள் பல­ரும் அதி­கா­லை­யி­லேயே சுவா சூ காங் குரோ­வில் உள்ள விரை­வுக் கட்­டு­மான தங்­கு­வி­டு­திக்­குச் சென்று­விட்­ட­னர்.

அங்­கி­ருக்­கும் வெளி­நாட்டு முஸ்­லிம் ஊழி­யர்­க­ளுக்கு 'சகர்' உண­வாகச் சப்­பாத்தி, பருப்­புக்­கறி, இனிப்பு, பழம், பால் என 800க்கும் மேற்­பட்ட உண­வுப் பொட்­ட­லங்­களை வழங்­கி­னர்.

"இந்த ரம­லானை இன்­னும் அர்த்­த­முள்­ள­தாக்­கும் வித­மாக, எல்­லாத் தரப்பு சிங்­கப்­பூ­ரர்­களும் ஒன்­றி­ணைந்து நமது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பது மகிழ்ச்சி தரு­கிறது," என்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் திரு ஸாக்கி பதி­விட்­டுள்­ளார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­டன் ஒன்­றாக அமர்ந்து விடி­ய­லுக்­கு­முன் உண­வுண்டு, பின் அவர்­க­ளு­டன் இணைந்து தொழுகை மேற்­கொண்­டார் திரு ஸாக்கி.

"ஓராண்­டுக்­கு­முன் நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடை­முறை­யில் இருந்­த­போது மிக­வும் வேறு­பட்ட சூழலில் நாம் ரம­லான் நோன்­பைத் தொடங்­கி­னோம். இப்­போது நிலைமை பெரிதும் மேம்­பட்­டுள்­ளது. மீட்­புப் பாதை­யில் இருக்­கி­றோம்," என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மனி­த­வள அமைச்­சின்­கீழ் செயல்­படும் 'ஏஸ்' அமைப்பு, 'ஹோம் ஃபார் ஆல் மைக்­ரன்ட்ஸ்' எனும் அரசு சாரா அமைப்பு, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குத் தேர்ச்சி அடிப்­ப­டை­யில் பயிற்சி வழங்­கும் 'எஸ்­டிஐ' பயி­ல­கம் ஆகி­யவை இணைந்து இந்த விடி­ய­லுக்­கு­முன் உண­வுத் திட்­டத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன.

இரவுத் தொழுகை (தராவிஹ்), பள்­ளி­வா­சல்­களில் கஞ்சி விநி­யோ­கம் என இவ்­வாண்­டு சிங்­கப்­பூரில் முஸ்­லிம்­கள் பாது­காப்­பாக ரம­லான் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­கிறது.

ரம­லான் மாதத்­தில் தங்­கு­வி­டு­தி­களில் அதி­க­பட்­சம் 200 பேர் வரை ஒன்­று­கூ­டித் தொழுகை நடத்­த­லாம் என மனி­த­வள அமைச்சு கடந்த வாரம் அறி­வித்­தி­ருந்­தது.

சிங்கப்பூர் பள்ளிவாசல்களும் சில சமூக மன்றங்களும் வழக்கம் போல நேற்று கஞ்சி விநியோகத்தை மீண்டும் தொடங்கின.