தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்தாம் மாடியிலிருந்து தவறி விழுந்து இளையர் உயிரிழப்பு

2 mins read
13d7bec0-f62b-4d21-814a-4198dfd7a6f8
-

கொண்­டோ­மி­னி­யத்­தில் ஏணி­யில் இருந்து பின்­பு­ற­மாக, பத்­தா­வது தளத்­தில் இருந்து மூன்­றாம் தளத்­தில் விழுந்து 23 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்டார்.

இம்­மா­தம் 5ஆம் தேதி திங்­கட்­கி­ழமையன்று 'வாட்­டர்­மார்க்@ராபர்ட்­சன் கீ' குடி­யி­ருப்­பில் இவ்­வி­பத்து நிகழ்ந்­தது. சம்­பவ இடத்­தி­லேயே அந்த இளை­யர் இறந்து­விட்­ட­தாக துணை ராணு­வப் படை­யி­னர் தெரி­வித்­த­னர்.

அவ்­வி­ளை­யர் பணி­யாற்­றிய 'ஏபெக்ஸ் வோர்ல்­டு­வைட் மூவர்ஸ் அண்ட் சர்­வீ­சஸ்' நிறு­வ­னம் வேலையை நிறுத்­து­மாறு மனி­த­வள அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

ரிவர் வேலி பகு­தி­யில், 5 ரோடைக் ஸ்தி­ரீட்­டில் உள்ள அந்த கொண்­டோ­மி­னி­யத்­தில் அறை­க­லன்­களை அப்­பு­றப்­ப­டுத்­தும் பணி­யில் அந்த ஆட­வர் ஈடு­பட்­டி­ருந்­த­போது விபத்து நிகழ்ந்­தது என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­த­தாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

இவ்­வாண்­டில் வேலை­யி­டத்­தில் நிகழ்ந்த 13வது மர­ணம் இது. விபத்து குறித்து அமைச்சு விசா­ரித்து வரு­கிறது.

ஆட­வர் மர­ணம் குறித்து முத­லில் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றச் சஞ்­சி­கை­யில் நேற்று முன்­தி­னம் செய்தி வெளி­யாகி இருந்­தது.

அந்த கொண்­டோ­மி­னி­யத்­தின் பத்­தாம் தளத்­தி­லுள்ள ஒரு வீட்­டி­லி­ருந்து அறை­க­லன்­க­ளை­யும் மின்­சா­த­னங்­க­ளை­யும் அப்­பு­றப்­படுத்­தும் பணி­யில் ஈடு­பட்ட ஊழி­யர் குழு­வில் அவ­ரும் இடம்­பெற்று இருந்­த­தாக அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

கடந்த பிப்­ர­வரி 10ஆம் தேதி நிகழ்ந்த மற்­றொரு வேலை­யிட விபத்­தில், யுனி­வர்­சிட்டி வாக்­கில் உள்ள ஒரு தனி­யார் வீட்­டில் கட்டு­மா­னப் பணியை மேற்­பார்வை செய்­து­கொண்­டி­ருந்­த­போது நிரந்­த­ர­வா­சி­யும் 'ஜேஎம்­எஸ் கன்ஸ்ட்­ரக்­‌ஷன்' நிறு­வ­னத்­தின் இயக்­கு­நரு­மான கோ கோக் ஹெங் எனும் ஆட­வர் 4.7 மீட்­டர் உய­ரத்­தில் இருந்து விழுந்து மர­ண­ம­டைந்­தார்.

கடந்த 2019ஆம் ஆண்­டில் வேலை­யி­டத்­தில் மேலே இருந்து கீழே விழுந்து பத்­துப் பேரும் 2020ல் 11 பேரும் இறந்­து­போ­ன­தாக வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன. வேலை­யிட விபத்­து­கள் மூலம் 2019ல் 39 பேரும் 2020ல் 30 பேரும் உயிரிழந்து விட்டனர்.