சிங்கப்பூர் வழியாகச் செல்லும் மாலுமிகளுக்கான பிரத்தியேக ஹோட்டலாக அறியப்படும் தஞ்சோங் பகாரில் உள்ள 'மேரிடைம் ஹவுஸ்' கட்டடம் 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடிக்கப்பட்டு மறுமேம்பாடு காணவுள்ளது. மார்ச் மாத இறுதியில் சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம் (எம்பிஏ) வெளியிட்ட ஏலக்குத்தகை ஆவணம் இதனைத் தெரிவிக்கிறது. ஏப்ரல் 23 அன்று நிறைவடையும் ஏலக்குத்தகையின்படி, மறுமேம்பாட்டிற்கான கட்டுமானச் செலவு $30 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது. மறுசீரமைக்கப்பட்ட பின்னர் இக்கட்டம், தொடர்ந்து மாலுமிகளுக்கும் தங்குமிட வசதிகளை வழங்கும், அதே நேரத்தில் அனைத்துலகப் பயிற்சி, ஆராய்ச்சி, கருத்தரங்குகளுக்கான ஒரே இடமாகவும் செயல்படும்.
கட்டடத்தின் பொதுவான தேய்மானங்களும் காலப்போக்கில் அதிகரித்து வந்துள்ள பராமரிப்புச் செலவுகளும் கட்டடம் மறுசீரமைக்கப்படுவதற்கும் முன்னோட்ட வடிவமைக்கு ஆலோசகரை ஈடுபடுத்துவதற்குமான காரணங்கள் என்று எம்பிஏ தெரிவித்தது.

