புத்தாண்டு புத்துணர்வுடன் மக்கள் வேண்டுதல்களும் பல

புத்தாண்டு புத்துணர்வுடன் மக்கள் வேண்டுதல்களும் பல

3 mins read
483f9207-9268-48ad-9165-7fd075869a87
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு மக்கள் நேற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். படம்: திமத்தி டேவிட் -

கி. ஜனார்த்­த­னன்

கடந்த தமிழ்ப் புத்­தாண்­டின்போது வீட்­டில் முடங்­கி­யி­ருந்த பல­ருக்கு இவ்­வாண்டு சித்­திரை புத்­தாண்­டின்­போது கோயில்­க­ளுக்­குச் செல்ல முடிந்­தது மன­நி­றை­வை­யும் மகிழ்ச்­சி­யை­யும் அளித்­துள்­ளது.

சித்திரைப் புத்­தாண்டை முன்­னிட்டு நேற்று ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயில் மற்­றும் ஸ்ரீ வட­பத்­திர காளி­யம்­மன் கோயி­லில் பக்­தர்­கள் கூட்­டம் அதி­க­மாக இருந்­தது. எல்­லை­கள் மீண்­டும் திறந்து வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் எப்­போது தொடங்­கும் என்­பதே பல­ரது எண்­ணங்­களில் இருந்த ஒரு கேள்­வி­யா­க­வும் வேண்­டு­கோ­ளா­க­வும் இருந்­தது. இரண்டு கோயில்­க­ளி­லுமே வழக்­கத்­திற்கு மாறான கூட்­டம் இருந்­தா­லும் சமூக இடை­வெளி கட்­டிக்­காக்­கப்­பட்­டது. ஆல­யங்­களுக்­குள் செல்­லும் பக்­தர்­க­ளி­டையே சமூக இடை­வெளி இருப்­பதை ஆல­யம் உறுதி செய்­தது. வார நாளாக இருந்­த­தால் நேற்­றுக் காலை 10 மணிக்­குப் பிறகு கூட்­டம் கணி­ச­மா­கக் குறை­யத் தொடங்­கி­யது.

புத்­தாண்டை மீண்­டும் கோயி­லில் கொண்­டா­டு­கி­றோம் என்ற புத்­து­ணர்­வு­டன் வேட்டி சட்டை அணிந்­த­வாறு 33 வயது தக­வல் தொழில்­நுட்ப நிபு­ணர் பழ­னி­யப்­பன் அழ­க­ராஜ், தமது இரண்டு வயது மகன் மதன் வீரன், மனைவி ஷோபா தேவி (29) ஆகி­யோ­ரு­டன் பெரு­மாள் கோவி­லுக்­குச் சென்­றார். நாட்­டில் கொவிட்-19 நில­வ­ரம் மேம்­பட்டு வரு­வது, புத்­தாண்­டிற்கு மகிழ்ச்சி சேர்த்­தி­ருப்­ப­தா­கக் கூறிய அவர், நோயை எதிர்ப்­ப­தில் சமூ­கம் காட்­டிய ஒற்­றுமை தொட­ர­வேண்­டும் என வேண்­டிக்­கொள்­வ­தா­கத் தெரி­வித்­தார்.

கொரோனா நோயா­ளி­கள் சென்­றி­ருந்த இடங்­களில் வட­பத்­திர காளி­யம்­மன் ஆல­ய­மும் ஒன்று என்ற செய்தி கடந்த மாதம் வெளி­வந்­ததை அடுத்து ஆல­யம் அதன் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யது. பக்­தர்­களும் தைரி­யத்­து­டன் ஆல­யத்­திற்­குத் தொடர்ந்து வருகை புரிந்­த­னர்.

"நாளைய பொழுது குறித்த நம்­பிக்­கையை வளர்ப்­ப­தற்­கா­கத்­தானே நாம் ஆல­யங்­க­ளுக்­குச் செல்­கிறோம். இவ்­வாண்­டு நிலைமை நிச்­ச­யம் சீர­டை­யும் என்று நான் நினைக்­கி­றேன்," என்று சேவை, உப­ச­ரிப்­புத் துறை­யில் பணி­யாற்­றும் பி.வீரன், 44, தெரி­வித்­தார்.

கடந்­தாண்டு போலவே இந்­தப் புத்­தாண்­டின்­போ­தும் நாடு திரும்ப முடி­யாத மலே­சி­யர்­கள் இதையே விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­த­னர். தற்­போ­தைய கிரு­மிப்­ப­ர­வ­லால் சிங்­கப்­பூ­ரி­லேயே இருக்க வேண்­டிய சூழல், தங்­க­ளுக்கு மேலும் நிதி நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக சிலாங்­கூ­ரைச் சேர்ந்த 24 வயது பாது­கா­வல் அதி­காரி தீப­னும் ஜோகூர் பாரு­வைச் சேர்ந்த 23 வயது யோகா­வும் தெரி­வித்­தனர்.

மலே­சி­யா­வில் தங்­கி­யுள்ள தங்­களின் குடும்­பத்­தா­ரைப் பார்த்து ஓராண்­டுக்கு மேல் ஆகி­விட்­ட­தாக இல்­லத்­த­ர­சி­க­ளான 65 வயது தமிழ் முல்லை, 67 வயது ரத்னா ஆகி­யோர் தெரி­வித்­த­னர். குடும்­பத்­தினர் பாது­காப்­பாக இருப்­ப­து­டன் விரை­வில் அவர்­களை நேரில் பார்க்­க­வேண்­டும் என்­பதே தங்­களின் வேண்­டு­தல் என இரு­வ­ரும் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

தமி­ழ­கத்­தின் காரைக்­குடி மாவட்­டத்­தைச் சேர்ந்த 51 வயது பொறி­யா­ளர் முரு­க­தாஸ், தமது தாய­கத்­தில் கொரோனா கிரு­மிப்­ப­ர­வல் மேலும் தணிந்து நிலைமை சீரா­க­வேண்­டும் என வேண்­டிக்­கொள்­வ­தா­கத் தெரி­வித்­தார்.

அதே­போல் இந்­தி­யா­வில் இருக்­கும் தம் குடும்­பத்­தைப் பற்றி நினைத்து அவ்­வப்­போது மன அழுத்­தத்­திற்கு ஆளா­வ­தா­கக் கூறிய 52 வயது காசி விசுவநாதன், நல்ல எண்ண அலை­க­ளுக்­காக இந்த தினத்­தில் கோயி­லுக்கு வந்­த­தா­கக் கூறி­னார்.

"நம்­பிக்கை மன­தில் வலு­வாக இருந்­தால் நாம் அனை­வ­ரும் இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து முழு­மை­யாக மீண்டு வர­லாம்," என்று அவர் கூறி­னார்.