பிரதமர் லீ: நீரிழிவுக்கு எதிராக பலமுனைப் போர்

பிரதமர் லீ: நீரிழிவுக்கு எதிராக பலமுனைப் போர்

2 mins read
a366fbc6-b14d-4703-b26f-9d13ab87660f
-

நீரி­ழி­வுக்கு எதி­ரான போரில் சிங்­கப்­பூர் கடந்த ஐந்­தாண்­டு­களில் பல­வி­த­மான உத்­தி­க­ளைக் கையாண்டு வந்­துள்­ள­தாக பிர­த­மர் லீ சியன் லூங் குறிப்­பிட்­டுள்­ளார். உலக அள­வில் 400 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­ன­வர்­க­ளைப் பாதித்­தி­ருக்­கும் இந்த நாட்­பட்ட நோயைக் கையாள நாடு­கள் இணைந்து செயல்­பட வேண்­டும் என்­றும் அவர் அழைப்பு விடுத்­தார்.

குடி­பா­னங்­களில் கலக்­கப்­படும் சர்க்­க­ரை­யின் அளவு தொடர்­பான விளம்­ப­ரங்­களில் கடும் விதி­மு­றை­கள் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது முதல் நாட­ளா­விய சுகா­தா­ரப் பரி­சோ­தனை வரை பல்­வேறு முயற்­சி­கள் சிங்­கப்­பூ­ரில் எடுக்­கப்­பட்­டுள்­ளதை பிர­த­மர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இவ்­வாண்டு இறு­திக்­குள் கலன்­களில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் இனிப்புப் பானங்­களில் 'ஏ' முதல் 'டி' வரை­யி­லான ஊட்­டச்­சத்­துக் குறி­யீ­டு­கள் அச்­சி­டப்­பட வேண்­டும். 'டி' குறி­யீடு உள்ள பானங்­க­ளின் விற்­ப­னை­யைக் கடை­கள் விளம்­ப­ரப்­ப­டுத்த முடி­யாது.

துடிப்­பான வாழ்க்­கை­முறை, உடற்­ப­ரு­மனைக் குறைக்க ஊக்­கு­விப்­ப­து­டன் நீரி­ழி­வுப் பிரச்­சி­னை­யைச் சமா­ளிப்­ப­தற்­கான ஆலோ­ச­னை­களை நிபு­ணர்­களும் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தைப் பிர­த­மர் தமது உரை­யின்­போது குறிப்­பிட்­டார்.

உலக சுகா­தார அமைப்­பின் 'குளோ­பல் டய­பெட்­டிஸ் காம்­பேக்ட்' எனும் நிகழ்­வின் தொடக்க நிகழ்ச்­சி­யில் நேற்று பேசிய பிர­த­மர் லீ, நீரி­ழி­வுப் பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரர்­கள் ஆரோக்­கி­ய­மான உணவு மற்­றும் வாழ்க்­கை­மு­றை­யைப் பின்­பற்ற ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

முறை­யாக சிகிச்சை அளிக்­கப்­

ப­டா­விட்­டால் கடும் சிக்­கல்­க­ளை­யும் அத­னால் மர­ண­மும்­கூட நிக­ழும் சாத்­தி­ய­முள்ள நீரி­ழி­வுப் பிரச்­சி­னை­யைத் தடுப்­பது, சமாளிப்பது ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் ஆற்­றல் மிகு திட்­டங்­களை நாடு­கள் நடை­மு­றைப்­ப­டுத்த இந்த 'குளோ­பல் டய­பெட்­டிஸ் காம்­பாக்' உத­வும்.

உலக மக்­கள்­தொ­கை­யில் 6 விழுக்­காட்­டி­னர் நீரி­ழி­வால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், 2030ஆம் ஆண்­டுக்­குள் 500 மில்­லி­யன் மக்­கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் அபா­யம் நில­வு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் 400,000க்கும் அதி­க­மா­னோர் நீரி­ழி­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இங்கு மூவ­ரில் ஒரு­வர் தங்­க­ளது வாழ்­நா­ளில் நீரி­ழி­வுக்கு உள்­ளா­க­லாம்.

மருத்­து­வச் செலவு, செயல்­

தி­றன் குறை­பாடு போன்­றவை கார­ண­மாக நீரி­ழி­வால் 2014ஆம் ஆண்­டில் $940 மி. இழப்பு ஏற்­பட்­டது. வரும் 2050ஆம் ஆண்­டு­வாக்­கில் அந்த இழப்பு $1.8 பில்­லி­ய­னாக அதி­க­ரிக்­கக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மார­டைப்பு, பக்­க­வா­தம் போன்ற கடும் சுகா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளுக்­குக் கார­ண­மா­வ­து­டன் கொவிட்-19 உட்­பட மற்ற சுகா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளுக்­கான சிகிச்­சை­யை­யும் நீரி­ழிவு சிக்­க­லாக்­கு­கிறது.

"நீரி­ழி­வைத் தடுப்­பது, எதிர்­கொண்டு சமா­ளிப்­பது போன்­ற­வற்­றின் தொடர்­பில் நமது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்டு இணைந்து செயல்­பட்டு மக்­களை மகிழ்ச்­சி­யு­ட­னும் ஆரோக்­கி­யத்­து­ட­னும் வைத்­தி­ருப்­போம்," என்­றும் பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

ரத்த சர்க்­க­ரை­யின் அள­வைக் கட்டுக்­குள் வைக்க உத­வும் இன்­சு­லின் மருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்டு 100 ஆண்­டு­கள் ஆகி­யுள்ள நிலை­யில் 'குளோ­பல் டய­பெட்­டிஸ் காம்­பேக்ட்' தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிகழ்­வில் அர­சாங்­கப் பிர­தி­நி­தி­க­ளைத் தவிர நோயா­ளி­களும் பங்­கேற்று தங்­க­ளது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வ­து­டன் நீரி­ழிவுப் பிரச்­சினை உள்­ள­வர்­க­ளின் பரா­ம­ரிப்பு கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டி­ய­தாக இல்­லாத அம்­சங்­கள் பற்­றி­யும் கருத்­து­ரைப்­பர்.