துப்பாக்கி வைத்திருந்த ஏட்டோஸ் துணை காவல் அதிகாரி $24,000 கொள்ளை

துப்பாக்கி வைத்திருந்த ஏட்டோஸ் துணை காவல் அதிகாரி $24,000 கொள்ளை

3 mins read
51469144-1b71-4d7c-8eca-f8b02d33fe1b
நடவடிக்கையின்போது போலிசார் பறிமுதல் செய்த ரொக்கம், பை, சட்டை ஆகியவையும் துப்பாக்கி, கொள்ளையின்போது அளிக்கப்பட்ட ஆங்கில வாசகக் குறிப்பு போன்றவற்றுடன் கைப்பற்றப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

துப்­பாக்கி வைத்­தி­ருந்த ஏட்­டோஸ் துணை காவல் அதி­காரி ஒரு­வர் ஆயு­த­மேந்­திய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது. 15 ஆண்­டு­களில் நிகழ்ந்த அத்­த­கைய முதல் சம்­ப­வம் இது.

மஹாடி முக­ம்மது முக்­தார், 38, எனும் அந்த ஆட­வர் ஜூரோங் கேட்வே ரோட்­டில் இருக்­கும் கடன் வழங்­கும் நிறு­வ­னம் ஒன்­றில் $24,000க்கும் அதி­க­மான ரொக்­கத்தை இம்­மா­தம் 12ஆம் தேதி பிற்­ப­கல் 3.55 மணி­ய­ள­வில் கொள்­ளை­ய­டித்­து­விட்­டுத் தப்­பித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

"இது ஒரு கொள்ளை. சத்­த­மிட வேண்­டாம். என்­னு­டைய பையில் ஒரு துப்­பாக்கி இருக்­கிறது. இருக்­கும் பணம் முழு­வ­தை­யும் இந்­தப் பையில் போடு," எனும் பொருள்­ப­டும்­ப­டி­யான ஆங்­கில வாச­கத்தை எழு­திய குறிப்பை சம்­ப­வம் நிகழ்ந்த நிறு­வ­னத்­தில் இருந்த ஊழி­ய­ரி­டம் மஹாடி காட்­டி­யது முதல்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தி­ருப்­ப­தாக நேற்று போலிஸ் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

அந்த ஊழி­யர் பணத்­தைக் கொடுத்­த­தும் அதை எடுத்­துக்­கொண்டு தப்­பி­னார் மஹாடி.

கொள்­ளைச் சம்­ப­வத்­தின்­போது துப்­பாக்­கியை வைத்­தி­ருந்த மஹாடி அதனை அந்த ஊழி­ய­ரி­டம் காட்­ட­வில்லை என­வும் இந்­தக் கொள்­ளைச் சம்­ப­வத்தை அவர் தனி ஆளாக நிகழ்த்­தி­ய­தா­க­வும் போலி­சார் தெரி­வித்­த­னர்.

இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு சன் பிளாசா ஷாப்­பிங் சென்­ட­ரில் உள்ள '4டி' கடை­யில் துப்­பாக்கி முனை­யில் கொள்­ளைச் சம்­ப­வம் நிகழ்ந்­தது என்­ப­தை­யும் போலி­சார் நினை­வு­கூர்ந்­த­னர்.

அதீத விசா­ர­ணை­கள், போலிஸ் கேம­ராக்­கள் மற்­றும் கடை­யில் இருந்த கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து பெற­ப்பட்ட படங்­கள் ஆகி­ய­வற்­றைக்­கொண்டு குற்­ற­வி­யல் விசா­ர­ணைப் பிரிவு, போலிஸ் விசா­ர­ணைப் பிரிவு, கிள­மெண்டி போலிஸ் பிரிவு ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் ஏட்­டோஸ் ஊழி­யர்­க­ளின் உத­வி­யு­டன், கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட நபர் பணி­யில் இருந்த ஏட்­டோஸ் துணைக் காவல் அதி­காரி என்­பதை உறு­தி­செய்­த­னர்.

கொள்­ளைச் சம்­ப­வம் நிகழ்ந்த ஐந்து மணி நேரத்­துக்­குள் மஹாடி கைது செய்­யப்­பட்­டார்.

கடந்த திங்­கட்­கி­ழமை கார்ப்­ப­ரே­ஷன் ­டி­ரைவ்­வில் இருக்­கும் ஏட்­டோஸ் தலை­மை­ய­கத்­தில் பணிக்கு வந்த அந்த சந்­தேக நபர் தான் பணிக்­குச் செல்­ல­வேண்­டிய இடத்­துக்­குச் செல்­வ­தற்கு முன்­பாக தன்­னு­டைய துப்­பாக்­கி­யைப் பெற்­றுக்­கொண்­டார் என மஹாடி­யின் பெய­ரைக் குறிப்­பி­டா­மல் போலி­சார் தெரி­வித்­த­னர். பின்­னர், தன்­னு­டைய சீரு­டையை மாற்­றிக்­கொண்டு தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து அனு­ம­தி­யின்றி வெளி­யே­றி­னார்.

குற்­றச்­செ­ய­லைப் புரிந்த பிறகு மஹாடி மீண்­டும் அலு­வ­ல­கத்­தின் தலை­மை­ய­கத்­துக்­குத் திரும்பி சீரு­டையை அணிந்­து­கொண்டு, அலு­வ­லக வேனை ஓட்­டிக்­கொண்டு வேலை செய்ய வேண்­டிய இடத்­துக்­குச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கொள்­ளை­யிட்ட பணத்­தில் குறிப்­பி­டத்­தக்க தொகையை தன்­னு­டைய 34 வயது தோழி­யின் கணக்­கில் மஹாடி போட்­ட­தும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. அத­னை­ய­டுத்து, திரு­டிய பொருளை நேர்­மை­யின்றி பெற்­ற­தாக அந்­தப் பெண்­ணும் கைது செய்­யப்­பட்­டார்.

உரி­ம­மின்றி கடன் வழங்­கு­வோ­ரி­ட­மி­ருந்து தாம் பெற்­றி­ருந்த கட­னைத் திருப்­பிச் செலுத்­தும் பொருட்டு சில வங்­கிக் கணக்­கு ­க­ளுக்­கும் கொள்­ளை­யிட்ட பணத்­தின் ஒரு பகு­தியை மஹாடி அனுப்­பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தக் கொள்­ளை­யின் தொடர்­பில் 16 முதல் 48 வய­துக்­குட்­பட்ட மேலும் 8 பேரை போலி­சார் கைது செய்­த­னர். கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பணத்­தில் $17,500 மீட்­கப்­பட்­டுள்­ளது. எஞ்­சிய தொகையை மீட்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக போலிஸ் தெரி­வித்­தது.

திட்­ட­மி­ட்டு குற்­றச்செயல் புரி­யும்­போது சட்­ட­வி­ரோ­த­மாக ஆயு­தத்தை வைத்­தி­ருந்­தது உட்­பட குற்­றச்­சாட்­டு­கள் மஹாடி மீது நேற்று காலை நீதி­மன்­றத்­தில் சுமத்­தப்­பட்­டன.

விசா­ர­ணைக்­காக காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருக்­கும் அவர் வரும் 21ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாக்­கப்­ப­டு­வார்.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு ஆயுள் தண்­டனையுடன் குறைந்­த­பட்­சம் 6 பிரம்­ப­டி­கள் விதிக்­கப்­ப­ட­லாம்.

நேற்று பிற்­ப­க­லில் அவ­ரது தோழி மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவர் மீதான குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு ஐந்­தாண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

விசா­ர­ணை­யில் உதவி வரும் ஏட்­டோஸ் நிறு­வ­னம், "ஆயு­தங்­கள் ஏந்தி சட்­ட­வி­ரோதச் செயல்­களில் ஈடு­ப­டு­வது உட்­பட குற்­றச் செயல்­களில் ஈடு­படும் ஊழி­யர்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஊழி­யர்­கள் துப்­பாக்­கி­ க­ளைக் கொண்டு செல்­ல­வும் பணிக்­கும் தகு­தி­யுள்­ளவர்­களா என்­பதை உறுதி செய்ய துணைக் காவல் அதி­கா­ரி­க­ளுக்குக் கடு­மை­யான விதி­மு­றை­கள், பாது­காப்பு நடை­மு­றை­கள், கடும் நடத்தை விதி­கள் போன்­றவை விதிக்­கப்­ப­டு­கின்­றன," எனக் குறிப்­பிட்­டது.

வேலை­யில் தேவைப்­பட்­டால் மட்­டுமே பயன்­ப­டுத்­து­வ­தற்­காக நம்பி கொடுக்­க­ப்பட்ட துப்­பாக்­கியை சந்­தேக நபர் தவ­று­த­லா­கப் பயன்­

ப­டுத்­தி­ய­தைச் சுட்­டிக்­காட்­டிய குற்­ற­வி­யல் விசா­ர­ணைப் பிரி­வின் இயக்­கு­நர் ஹவ் குவாங் ஹீ, அதி­கா­ரி­கள் துடிப்­பு­டன் செயல்­பட்டு பொது­மக்­க­ளின் பாது­காப்­புக்குப் பங்­கம் விளை­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்

­பா­கவே சந்­தேக நப­ரைப் பிடித்­து­விட்­ட­னர் என்­றார்.

பொது­மக்­க­ளின் பாது­காப்­புக்­குப் பங்­கம் விளை­விக்­கும் வகை­யில் நடந்­து­கொள்­வோர் மீது சட்­டப்­படி கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மூத்த துணை ஆணை­யம் ஹவ் குறிப்­பிட்­டார்.