மனிதவள அமைச்சின் 'அஷ்யூரன்ஸ் கேர் அண்ட் எங்கேஜ்மண்ட்' குழுவிலிருந்து அனுப்பப்படுவது போன்ற தடுப்பூசி போடுவது தொடர்பிலான போலி மின்னஞ்சல் மூலம் தனிநபர் தொடர்பு தகவல்களைத் திரட்டும் மோசடி இணையத்தில் பரவுவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
அந்த மோசடி மின்னஞ்சல் குறித்து தமது ஃபேஸ்புக் பதிவில் எச்சரித்த அமைச்சு, அத்தகைய மின்னஞ்சல்களைப் பெறுவோர் போலிசில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அந்த மின்னஞ்சலின் இணைப்பைப் பதிவிறக்கம் செய்யவோ, இணைப்புகளைச் சொடுக்கவோ வேண்டாம் எனவும் அமைச்சு கேட்டுக்கொண்டது.
தகவல்கள், பரிவர்த்தனை
களுக்கு மனிதவள அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை நாடுமாறும் அமைச்சு குறிப்பிட்டது.

