$6.9 மில்லியன் மோசடி; 31 பேரிடம் விசாரணை

$6.9 மில்லியன் மோசடி; 31 பேரிடம் விசாரணை

1 mins read
814aa085-521e-4cfe-b8cc-b8e7921c0ccc
-

சீன அதி­கா­ரி­க­ளைப்­போல பாவனை செய்து $6.9 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை மோசடி செய்­யப்­பட்­ட­தன் தொடர்­பில் போலி­சார் 31 பேரி­டம் விசா­ரணை செய்து வரு­கின்­ற­னர்.

கடந்த மார்ச் மாதம் முதல் வங்­கி­கள் அல்­லது சீன அதி­கா­ரி­கள் அழைப்­பது போன்ற போலி கைபேசி அழைப்­பு­க­ளைப் பெறு­வ­தாக பல­ரி­ட­மி­ருந்து புகார்­கள் பெறப்­பட்­டன.

சீன அதி­கா­ரி­க­ளைப்­போல பாவனை செய்­வோர், பொது­வாக, மறு­மு­னை­யில் பேசு­வோ­ரி­டம் அவர்­க­ளது வங்­கிக் கணக்­கு­கள் மோசடி பரி­வர்த்­த­னை­களில் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவோ அல்­லது கள்­ளப் பணம் தொடர்­பான நட­வ­டிக்­கை­களில் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவோ குறிப்­பிட்டு பணம் அனுப்­பு­மாறு அல்­லது வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளைத் தரு­மாறு கோரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள், $5,000 முதல் $824,500 வரை­யி­லான தொகையை மோசடி ஆட்­கள் வழங்­கிய வங்­கிக் கணக்­குக்கு பணம் அனுப்­பி­னர். அவ்­வாறு $6,920,000 மோசடி செய்­யப்­பட்­டது.

மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்­ரல் 12ஆம் தேதி­வரை 19 வயது இளம்­பெண், 22 மற்­றும் 62 வய­து­களில் இரு ஆட­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் போலி அடை­யாள அட்­டை­கள் இருந்­தன. மற்ற 28 சந்­தேக நபர்­கள் பண முத­லை ­க­ளா­கச் செயல்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மோச­டிக் குற்­றத்­துக்கு 10 ஆண்­டு­கள் வரை சிறை, அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம். பாவனை செய்து ஏமாற்­று­வோ­ருக்கு ஐந்­தாண்­டு­கள் வரை சிறை, அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.