'சொத்து முதலீட்டுச் சந்தை முன்னைய நிலைக்குத் திரும்பலாம்'

'சொத்து முதலீட்டுச் சந்தை முன்னைய நிலைக்குத் திரும்பலாம்'

1 mins read
88091d9b-63af-45e1-be3b-6052195b0492
-

சிங்­கப்­பூ­ரின் சொத்து முத­லீட்­டுச் சந்தை கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலைக்­குத் திரும்­பும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக 'கோலி­யர்ஸ்' சொத்­துச் சந்தை ஆலோ­சனை நிறு­வ­ன­ம் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் சொத்­துச் சந்தை முத­லீட்டு விற்­பனை 25.8% உயர்ந்­துள்­ளது. ஆண்டு அடிப்­ப­டை­யில் இது 47.9% அதி­க­ரித்து, $3.8 பில்­லி­யனை எட்­டி­யது.

வணிக, தொழி­ல­கச் சொத்­துப் பிரி­வில் முத­லீடு கூடி­யதே இதற்கு முக்­கி­யக் கார­ணம் எனக் கூறப்­பட்­டது. நிறு­வன இணைப்­பு­க­ளை­யும் அர­சாங்க நில விற்­பனை நட­வடிக்­கை­க­ளை­யும் இது உள்­ள­டக்­க­வில்லை.

சிங்­கப்­பூர் முத­லீடு செய்­யப் பாது­காப்­பான இட­மா­கத் திகழ்­வது, தொழில்­பு­ரிய சாத­க­மான சூழல், பொரு­ளி­யல் வளர்ச்சி ஆகி­ய­வற்­றால் இவ்­வாண்­டி­லும் சொத்து விற்­பனை வலு­வாக இருக்­கும் என கோலி­யர்ஸ் எதிர்­பார்க்­கிறது.

75% ஊழி­யர்­கள் பணி­யி­டத்­திற்­குத் திரும்­ப­லாம் என அர­சாங்­கம் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி இருப்­பது நட­மாட்­டத்­தை­யும் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­க­ளை­யும் அதி­க­ரிக்­கும் என்று அந்­நி­று­வ­னத்­தின் ஆய்­வுப் பிரி­வுத் தலை­வர் டிரி­சியா சோங் குறிப்­பிட்­டார்.

2021 ஜன­வரி-மார்ச் கால­கட்­டத்­தில் $1.1 பில்­லி­யன் மதிப்­பி­லான வணி­கச் சொத்­து­கள் விற்­ப­னை­யா­கி­யுள்­ளன. இது காலாண்டு அடிப்­ப­டை­யில் 377% உயர்வு என்­றும் ஆண்டு அடிப்­ப­டை­யில் 43.8% அதி­க­ரிப்பு என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதே காலகட்டத்தில் தொழிலக முதலீட்டுப் பிரிவிலும் விற்பனை 141% கூடி, $1 பில்லியனாகவும் குடியிருப்பு முதலீட்டு விற்பனை 154% கூடி, $1.6 பில்லியனாகவும் உயர்ந்தன.