இன்று முதல் இம்மாதம் 29ஆம் தேதி வரை சிங்கப்பூரிலிருந்து செல்லும் மலிவுக் கட்டண
விமானச் சேவையான ஸ்கூட் ஹாங்காங்கில் தரையிறங்க முடியாது.
சில நாட்களுக்கும் முன்பு சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குச் சென்ற ஸ்கூட் விமானத்தில் இருவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்ததை அடுத்து இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11ஆம் தேதி ஹாங்காங்கில் தரையிறங்கிய ஸ்கூட் T980 விமானத்தில் பயணம் செய்த இருவருக்கு கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக ஹாங்காங் சுகாதாரத் துறை கூறியது. மேலும் ஒருவர் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றும் அது தெரிவித்தது.
தனக்கு எதிராக ஹாங்காங் தற்காலிகத் தடை விதித்திருப்பதை ஸ்கூட் உறுதி
செய்துள்ளது.
ஏப்ரல் 17ஆம் தேதியிலிருந்து ஹாங்காங்கிற்கான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான ஸ்கூட் விமானச் சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

