சட்டவிரோத 'சந்திப்பு': ஏற்பாடு செய்ததாக குற்றச்சாட்டு

சட்டவிரோத 'சந்திப்பு': ஏற்பாடு செய்ததாக குற்றச்சாட்டு

2 mins read
e36188f5-f6d4-4943-9480-46022568bc17
சட்டவிரோத கார் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த இயோ ஜிங் செங் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­கும் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படுவதற்கு முன்­ன­தாக சட்­ட­

வி­ரோத சந்­திப்பு ஒன்­றுக்கு ஆட­வர் ஒரு­வர் ஏற்­பாடு செய்­த­தாக குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

கார் விற்­ப­னை­யா­ள­ரான 31 வயது இயோ ஜிங் செங் ஏற்­பாடு செய்த சந்­திப்பு ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் நடை­பெற்­றது. சந்­திப்­புக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்ட இடத்­தில் 150 கார்­கள் கூடி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 அபா­யம் இருந்­தும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அதை­ய­டுத்து, எல்லா கார்­களும் அங்­கி­ருந்து பூன் லேயில் உள்ள ஜாலான் புரோ­வுக்­குச் செல்ல இயோ ஏற்­பாடு செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவ்­வி­டத்தை அடைந்­த­தும் துவாஸ் வட்­டா­ரத்­தில் அவர்­களில் சிலர் சட்­ட­வி­ரோத கார் பந்­த­யத்­தில் ஈடு­பட்­ட­னர். அதற்­காக 100க்கும் மேற்­பட்ட கார்­கள் கூடின.

கொவிட்-19 கட்­டுப்­பாட்டை மீறி­யது, அபா­ய­க­ர­மாக கார் ஓட்­டி­யது, 10க்கும் மேற்­பட்­டோ­ருக்­கான சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்­தது, விசா­ர­ணைக்கு இடை­யூறு விளைவித்தது ஆகிய குற்­றச்­சாட்­டு­களை இயோ ஒப்­புக்­கொண்­டார்.

தீர்ப்பு அளிக்­கப்­ப­டும்­போது பொய்த் தக­வல் அளித்­தது, தாம் ஏற்­பாடு செய்த சட்­ட­வி­ரோத சந்­திப்­பில் பங்­கெ­டுத்­தது ஆகிய குற்­றச்­சாட்­டு­களும் கருத்­தில் கொள்­ளப்­படும்.

தமது கார் வர்த்­த­கத்­துக்­கான வாடிக்­கை­யா­ளர் கட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்த கார் சந்­திப்பு ஒன்றை நடத்த இயோ விரும்­பி­னார். அதற்­காக அந்த சட்­ட­வி­ரோத சந்­திப்­புக்கு அழைப்­பி­த­ழாக சுவ­ரொட்­டியை அவர் தயா­ரித்­தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி­யன்று இரவு 11 மணிக்கு ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் உள்ள மெக்­டோ­னல்ஸ் வாகன நிறுத்­து­மி­டத்­தில் சந்­திப்பு நிக­ழும் என அந்­தச் சுவ­ரொட்­டி­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த சுவ­ரொட்­டியை அவர் வாட்ஸ்­அப் குழுக்­க­ளுக்கு அனுப்­பி­வைத்­தார்.

அந்த சந்­திப்­புக்கு நான்கு நாட்­கள் இருந்­த­போது கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கம் மேலும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­த­து. அதன்­படி அத்­தி­யா­வசிய­மற்ற காரி­யங்­க­ளுக்கு

பத்­துக்­கும் மேற்­பட்­டோர் ஒன்­று­கூட தடை விதிக்­கப்­பட்­டது.

ஆனால் இயோ தாம் ஏற்­பாடு செய்த சந்­திப்பை ரத்து செய்­ய­வில்லை. சந்­திப்பு நடந்த இரவு 2.30 மணி அள­வில் சட்­ட­வி­ரோத கார் பந்­த­யம் குறித்து தக­வல் கிடைத்­த­தாக போக்­கு­வ­ரத்து போலி­சார் தெரி­வித்­த­னர்.

சம்­பவ இடத்­தில் 100க்கும் மேற்­பட்ட கார்­கள் இருந்­த­தாக போலி­சார் தெரி­வித்­த­னர். போக்­கு­வ­ரத்து போலி­சா­ரைக் கண்­ட­தும் சட்­ட­

வி­ரோத கார் பந்­த­யத்­தில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தோர் அங்­கி­ருந்து தப்ப முயன்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால் அவர்­கள் தப்­பிச் செல்ல முடி­யா­த­படி சாலை­களில் தடுப்­பு­கள் போடப்­பட்­டி­ருந்­தன. சட்­ட­வி­ரோத கார் பந்­த­யத்­தில் ஈடு­பட்­டோ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வத்­துக்­குப் பிறகு வாட்ஸ்­அப் குழு­வி­லி­ருந்து வெளி­யே­றும்­படி சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளி­டம் இயோ கூறி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது. அழைப்­பி­தழ் படத்தை நீக்­கி­வி­டும்­

ப­டி­யும் அவர் தெரி­வித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்நிலையில், கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோது கார் தொடர்பான மற்றொரு சட்டவிரோத செயலில் இயோ ஈடுபட்டார்.

வேக வரம்பை மீறி விரைவுச்சாலையில் கார் ஓட்டியதை இயோ ஒப்புக்கொண்டார்.