'சாஃப்ரா' தோ பாயோ அருகே கார் விபத்து; ஆறு வயது சிறுவன் மருத்துவமனையில்

தோ பாயோவில் நேற்று (ஏப்ரல் 15) பிற்பகல் ஏற்பட்ட கார் விபத்தில் காயமுற்ற ஆறு வயது சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

கவனக்குறைவால் அச்சிறுவனுக்கு காயம் விளைவித்ததற்காக 51 வயது ஆண் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

லோரோங் 6 தோ பாயோவில் ‘சாஃப்ரா தோ பாயோ’ கட்டடத்துக்கு வெளியே இந்த விபத்து நிகழ்ந்ததாக சீன நாளிதழான வான்பாவ் செய்தி வெளியிட்டது.

அந்த வெள்ளை நிற காரின் சக்கரத்திற்கு அடியில் அந்தச் சிறுவன் சிக்கிக்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார். அப்போது அச்சிறுவனுடன் அவனது தாயாரும் உடனிருந்தார்.

அந்த காரைத் தூக்கிவிட அங்கிருந்த மூன்று வழிப்போக்கர்கள் உதவ முற்பட்டனர். ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

சம்பவ இடத்தில் அச்சிறுவனின் தாயார் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!