எதிர்காலத்தை உருவாக்கத் தேவையான 3 புது அம்சங்கள்

எதிர்காலத்தை உருவாக்கத் தேவையான 3 புது அம்சங்கள்

2 mins read
080381bc-2e69-4950-a09a-3023b930f1a6
-

சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்தை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய புதிய மூன்று அம்­சங்­கள் முக்­கி­யம் என துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் யோசனை தெரி­வித்து இருக்­கி­றார்.

சமூ­கத்­திற்கு மேலும் மதிப்பை உரு­வாக்­கு­வது; சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் பரந்த அள­வி­லான சமூ­கத்­தில் அக்­கறை காட்­டு­வது, முன்­னேற்­றத்­துக்­கான பாதையை வகுப்­பது ஆகி­யவை அந்த மூன்று அம்­சங்கள் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

பணம், கார், கடன் அட்டை, கூட்­டு­ரிமை வீடு, மன­ம­கிழ் மன்ற உருப்­பி­யம் ஆகிய ஐந்­தும் முன்பு சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கன­வாக இருந்­ததை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இருந்­தா­லும் அந்த விருப்­பங்­கள் இன்­றைய இளம் சிங்­கப்­பூரர்­க­ளைப் பொறுத்த வரை­யில் இனி­மேல் அந்த அள­வுக்கு ஒத்து இருக்­காது என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

"எப்­போ­துமே விருப்­பங்­கள் பரி­ண­மித்து வரு­பவை. இளம் தலை­மு­றை­யி­ன­ரி­டையே அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான விருப்­பங்­கள் இருக்­கின்­றன," என்று திரு ஹெங் தெரி­வித்­தார். சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப வடி­வ­மைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அமைச்­சர் நிலைக் கருத்­த­ரங்கு நேற்று நடந்­தது.

அதில் கலந்­து­கொண்ட மாண­வர்­க­ளி­டையே திரு ஹெங் உரை­யாற்­றி­னார். அப்­போது அவர் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சி­யும் மேம்­பா­டும் வேறு­பட்டு இருந்த ஒரு கால­கட்­டத்­தில் நீங்­கள் பிறந்து வளர்ந்து இருக்­கி­றீர்­கள். உலக கலா­சா­ரத்­திற்­கும் செல்­வாக்­கிற்­கும் சமூக ஊட­கங்­க­ளுக்­கும் நீங்­கள் ஆளாகி இருப்­பது அதி­கம்," என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

நல்ல வாழ்க்­கைத் தொழில், குடும்­பம் மற்­றும் நண்­பர்­க­ளு­டன் வலு­வான உற­வைப் பேணி வளர்ப்­பது, சொந்த குடும்ப வாழ்­வைத் தொடங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் ஆகிய அடிப்­படை விருப்­பங்­கள் இன்­ன­மும் மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்­பதை திரு ஹெங் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதே­வே­ளை­யில், மாற்­றத்தை உரு­வாக்கி, தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வலு­வான ஒரு விருப்­ப­மும் இளை­யர்­க­ளி­டம் காணப்­ப­டு­கிறது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மக்­கள் செயல் கட்­சி­யின் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர் பதவி­யில் இருந்து தான் வில­கிக்­கொள்ள இருப்­ப­தாக திரு ஹெங் சென்ற வாரம் அறி­வித்­தார்.

அதற்­குப் பிறகு முதன்­மு­த­லாக நேற்று அவர் பொது நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

அந்த நிகழ்ச்சி நேர­டி­யா­க­வும் மெய்­நி­கர் ரீதி­யி­லும் நடந்­தது.

மாண­வர்­களே நாட்­டின் எதிர்­கா­லம் என்­பதை வலி­யு­றுத்­திய துணைப் பிரதமர், சிங்­கப்­பூர் வர­லாற்­றின் அடுத்த அத்­தி­யா­யத்தை எழு­தப்­போ­வது மாண­வர்­களே என்­றும் தெரிவித்தார்.

சமூ­கத்­து­டன் சேர்ந்து ஒன்­றாகச் செயல்­பட்டு சிங்­கப்­பூ­ரை­யும் உல­கத்­தை­யும் இன்­னும் சிறந்த வாழ்­வி­ட­மாக ஆக்­கும்­படி மாண­வர்­களைத் துணைப் பிரதமர் வலி­யுறுத்­திக் கேட்­டுக்­கொண்­டார்.