சாலை விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த 6 வயது சிறுவன்

சாலை விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த 6 வயது சிறுவன்

1 mins read
51d5dd72-4c92-4e1a-98a2-1385f8e89c81
தோ பாயோ லோரோங் 6ல் உள்ள சாஃப்ரா வாகன நிறுத்து மிடத்தில் இருந்து வெளியே வரும் வழியில் வியாழக் கிழமை விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப் பட்டது. படம்:சாவ் பாவ் -

தோ பாயோ லோரோங் 6ல் வியாழக்­கி­ழமை பிற்­ப­க­லில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தை அடுத்து 6 வயது சிறு­வன் சுய­நி­னைவை இழந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டான்.

அந்த விபத்தை அடுத்து அலட்சி­ய­மாக வாக­னம் ஓட்டி கடுமை­யான காயத்தை விளை­வித்­த­தா­கக் கூறி 51 வயது ஆடவர் ஒரு­வரை போலி­சார் கைது செய்­த­னர். அந்த விபத்து தோ பாயோ லோரோங் 6ல் உள்ள சாஃப்ரா வாகன நிறுத்தி வைப்பு இடத்­தின் வாயி­லில் நிகழ்ந்­தது.

வரிக்­கு­திரை சாலைக் கடப்பைக் கடந்து கொண்­டி­ருந்­த­போது இடது­பு­ற­மாக திரும்­பிய ஒரு காரில் அந்­தச் சிறு­வன் அடி­பட்டு வாக­னத்­திற்­குக் கீழே மாட்­டிக்­கொண்­ட­தா­க­வும் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் வந்து சிறு­வனை மீட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

புலன்­வி­சா­ரணை நடப்­ப­தாக போலிஸ் தெரி­வித்­துள்­ளது.