புதிதாக 34 பேர் பாதிப்பு; மார்ச் 3க்குப் பிறகு ஒரே நாளில் இரு சமூகத்தொற்றுகள்

புதிதாக 34 பேர் பாதிப்பு; மார்ச் 3க்குப் பிறகு ஒரே நாளில் இரு சமூகத்தொற்றுகள்

1 mins read
6fdaa88b-08e3-4ba3-b930-591de8a20f20
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 34 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இத­னால் இங்கு பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 60,769 ஆக உயர்ந்­தது. சமூக அள­வில் இரு­வர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தும் புதிய எண்­ணிக்ை­க­யில் அடங்­கும். மார்ச் மார்ச் 3ஆம் தேதிக்­குப் பிறகு ஒரே நாளில் இரு சமூ­கத்­தொற்று பதி­வாகி இருப்­பது நேற்­று­தான்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­க­வில்லை என்று சுகா­தார அமைச்சு நேற்று அதன் முதற்­கட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

முன்­ன­தாக, வியா­ழக்­கி­ழமை தொற்று உறுதி செய்­யப்­பட்ட 16 பேரும் வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள் என்று அறி­விக்­கப்­பட்டு இருந்­தது. இவர்­களில் 10 பேர் இந்­தியா, பங்­ளா­தேஷ், மலே­சியா, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த வொர்க் பெர்­மிட் ஊழி­யர்­கள்.

இதர ஆறு பேரில் மூவர் நிரந்­த­ர­வா­சி­கள். இந்­தி­யா­வி­லி­ருந்­தும் பிலிப்­பீன்­சி­லி­ருந்­தும் அவர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருந்­த­னர். இந்­தி­யா­வி­லி­ருந்து இங்கு வந்­தி­ருந்த சார்ந்­தி­ருப்­போர் அட்­டை­தா­ரர் ஒரு­வ­ரும் இந்த எண்­ணிக்­கை­யில் அடங்­கு­வர். மற்ற இரு­வ­ரில் ஒரு­வர் மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த வேலை அனு­மதி அட்­டை­தா­ரர். இன்­னொ­ரு­வர் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் உள்ள குடும்ப உறுப்­பி­ன­ரைக் காண வந்த குறு­கிய கால வருகை அட்­டை­தா­ரர்.

இந்த 16 பேரும் கட்­டாய இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றி­ய­போது நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி இருப்­பது தெரிய வந்­தது. மேலும், அவர்­கள் அனை­வ­ரி­ட­மும் தொற்­றுக்­கான அறி­குறி காணப்­ப­ட­வில்லை என்று அமைச்சு குறிப்­பிட்­டது.