அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திடமிருந்து இழப்பீடு கோருகிறார் பார்த்தி லியானி

அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திடமிருந்து இழப்பீடு கோருகிறார் பார்த்தி லியானி

2 mins read
13d8c5ac-2cc0-4884-af16-26b8e977f712
-

தம் முத­லா­ளி­யி­ட­மி­ருந்து திரு­டி­ய­தாக குற்­றம் சுமத்­தப்­பட்டு, பின்­னர் குற்­ற­மற்­ற­வர் என்று நிரூ­பிக்­கப்­பட்­டதை அடுத்து, முன்­னாள் இல்­லப் பணிப்­பெண் பார்த்தி லியானி, அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அலு­வ­ல­கத்­தி­ட­மி­ருந்து இழப்­பீடு கோரி­யுள்­ளார்.

குற்­ற­வி­யல் நடை­மு­றைச் சட்­டம் 359(3) பிரி­வின் கீழ் இவ்­வாறு இழப்­பீடு கோரும் முதல் நபர் இந்­தோ­னீ­சி­ய­ரான திரு­வாட்டி பார்த்தி என நேற்று நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது. 2010ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இச்­சட்­டத்­தின்­படி, குற்­றம் சாட்­டப்­பட்ட ஒரு­வர் எந்த ஒரு குற்­றச்­சாட்­டி­லி­ருந்­தும் விடு­விக்­கப்­பட்ட நிலை­யில் $10,000 வரை­யி­லான இழப்­பீட்­டுத் தொகை­யைத் தர நீதி­மன்­றம் உத்­த­ர­வி­ட­லாம். மேலும், குற்­றச்­சாட்டு 'அற்­ப­மா­னது' அல்­லது 'சினம் மூட்­டும் தன்­மை­யு­டை­யது' என நீதி­மன்­றத்­தில் நிரூ­ப­ண­மானால், இழப்­பீடு விண்­ணப்­பம் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தனக்கு ஏற்­பட்­டுள்ள மொத்த இழப்­பீடு $73,100 என திரு­வாட்டி பார்த்தி குறிப்­பிட்­டி­ருப்­ப­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­துள்­ளன. வழங்­கப்­ப­டாத சம்­ப­ளம் மற்­றும் ஊதிய உயர்வு, 'ஹோம்' என்ற குடி­யே­றி­க­ளின் பொரு­ளி­யல் நிலைக்­கான மனி­தா­பி­மான அமைப்­பில் தங்­கி­ய­தால் நேர்ந்த $29,400 செலவு ஆகி­யவை இழப்­பீட்­டுத் தொகை­யில் அடங்­கும் எனக் கூறப்­பட்­டது. இந்­நி­லை­யில், இழப்­பீட்­டுத் தொகை­யைக் கோரு­வ­தில் வரம்பு இருந்­தா­லும் தம் முன்­னாள் முத­லாளி மற்­றும் பிர­ப­ல­மான வர்த்­த­க­ரு­மான லியூ மன் லியோங்­கி­ட­மி­ருந்து திரு­வாட்டி பார்த்தி இழப்­பீடு கோராமல் அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அலு­வ­ல­கத்­தி­டம் கோரி­யுள்­ளார்.

'நேர்­மை­யற்­ற தன்மை' அல்­லது 'தீமை விளை­விக்­கும் தன்மை' இருப்­பதை நிரூ­பிக்க வேண்­டும் என அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் முகம்­மது ஃபைசால் கூறி, திரு­வாட்டி பார்த்­தி­யின் விண்­ணப்­பத்தை நிரா­க­ரிக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார். இருப்­பி­னும், அவ்­வாறு நிரூ­பிக்­கத் தேவை­யில்லை என திரு­வாட்டி பார்த்­தி­யின் வழக்­க­றி­ஞர் திரு அனில் பால்­சந்­தனி வாதா­டி­னார்.

செப்­டம்­ப­ரில் புகார் தொடர்­பில் ஒழுங்­கீன விசா­ரணை மன்­றம் கூடும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.