தீவிரவாதச் சிந்தனையால் தூண்டப்பட்ட மலேசியருக்கு மூன்று ஆண்டு சிறை

தீவிரவாதச் சிந்தனையால் தூண்டப்பட்ட மலேசியருக்கு மூன்று ஆண்டு சிறை

2 mins read
a093e817-6b8e-4b92-b9b6-cfeab9fdf36a
-

தீவி­ர­வா­தச் சிந்­த­னை­யு­டன் செயல்­பட்ட 34 வயது மலே­சிய ஆட­வருக்கு, உயர் நீதி­மன்­றம் மூன்­றாண்டு சிறைத் தண்­டனை விதித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ராக வேலை செய்த முகம்­மது ஃபிர்டா­வோஸ் கமால் இன்ட்­ஸாம் மீது, ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வாத அமைப்பு தொடர்­பான பொருட்­களை வைத்­தி­ருந்­தது தொடர்­பில் ஆறு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

ஆட­வர் வைத்­தி­ருந்த பொருட்­களில் இரண்டு 'மெமரி கார்டு'கள், நாட்­டுக் கொடி ஒன்று, நான்கு புத்­த­கங்­கள், ஒரு கைபேசி ஆகி­யவை அடங்­கும்.

ஜோகூர் பாரு­வில் உள்ள சுல்­தான் இஸ்­கந்­தர் கட்­ட­டத்­தின் சுங்­கச்­சா­வ­டி­கள், குடி­நு­ழைவு, தடைக்­காப்பு வளா­கத்து வரு­கை­யா­ளர் பகுதியில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி­யன்று காலை 10.40 மணி­ய­ள­வில் ஆட­வர் குற்­றங்­கள் புரிந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஆட­வர் ஒப்­புக்­கொண்­டார்.

வழக்­க­றி­ஞர் இல்­லா­மல் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யான ஃபிர்டா­வோஸ், சென்ற ஆண்டு ஜூலை மாதத்­தில் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்­டார்.

பின்­னர், ஆட­வர் மலே­சிய அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வாத அமைப்­புக்­காக ஆயு­தம் ஏந்தி வன்­மு­றை­யில் ஈடு­பட தம்­மு­டைய சிங்­கப்­பூர் மனை­வி­யு­டன் சிரியா செல்ல அவர் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக கூறப்­பட்­டது.

ஆட­வ­ரின் 34 வயது மனைவி, ஒரு சம­யக் கல்வி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர் என்­றும் கண­வ­ரின் தீவி­ர­வா­தச் சிந்­த­னை­யால் அவ­ரும் தூண்­டப்­பட்டு கண­வ­ரு­டன் சிரி­யா­வுக்­குச் செல்­லத் தயா­ராக இருந்­தார் என்­றும் கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே மனை­விக்கு ஈராண்டு கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மல்­லாது சம­யக் கல்வி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­ற­வும் அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் வன்­மு­றை­யில் ஈடு­பட திட்­ட­மிட்­ட­தற்­கான அறி­குறி ஏதும் ஃபிர்டா­வோ­சி­டம் காணப்­ப­ட­வில்லை என்று சிங்­கப்­பூ­ரின் உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை தெரி­வித்­தது.

2016ஆம் ஆண்­டி­லி­ருந்து ஃபிர்டா­வோ­சுக்­குத் தீவி­ர­வா­தச் சிந்­த­னை­கள் ஏற்­ப­டத் தொடங்­கி­ய­தாக விசா­ர­ணை­கள் மூலம் தெரிய வந்­தது. தீவி­ர­வாத சித்­தாந்­தத்­தைப் பற்றி இன்­னும் விரி­வா­கத் தெரிந்­து­கொள்ள அவர் இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் அதில் ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­பால் ஈர்க்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாறு ஐஎஸ்­ஐ­எஸ்க்குத் தொடர்­பான கருத்­து­க­ளால் தொடர்ந்து ஈர்க்­கப்­பட்ட நிலை­யில் 2018ஆம் ஆண்டு முற்­பா­திக்­குள் இஸ்­லா­மிய சம­யத்­துக்­காக ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு சண்­டை­யி­டு­வ­தாக ஃபிர்டா­வோஸ் நம்­பி­விட்­டார். இஸ்­லா­மிய ஆட்சி உரு­வாக வன்­மு­றையை நாடு­வ­தில் தவ­றில்லை என்ற தவ­றான புரி­த­லும் அவ­ருக்கு ஏற்­பட்­டது.

ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்பு போரில் தோற்­ற­போ­தி­லும் அவர் தொடர்ந்து அதை ஆத­ரித்து வந்­தார்.

தமது சமூக ஊட­கப் பக்­கங்­களில் ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வாத அமைப்­புக்கு ஆத­ர­வான கருத்­து­க­ளை­யும் அவர் அடிக்­கடி பதி­விட்டு வந்­தார்.