இளையர் தொண்டூழியமும் சமூகப் பிணைப்பும் உயிர்நாடி

இளையர் தொண்டூழியமும் சமூகப் பிணைப்பும் உயிர்நாடி

2 mins read
3200e437-f44a-4fa5-86d1-6b1c95bbafcb
-

துணைப் பிரதமர் ஹெங், அமைச்சர் எட்வின் டோங் வலியுறுத்து

இளை­யர்­கள் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­ப­டு­வ­தும் சமூகக் குழுக்களுக்கு இடையில் பிணைப்­பு­களை ஏற்­படுத்து­வ­தும் சிங்­கப்­பூர் சமூ­கத்­துக்கு உயிர்­நா­டி­யா­னவை என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட்டும் கலா­சார, சமூக இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங்­கும் வலி­யு­றுத்­திக் கூறினர்.

'ஹார்ட்­வேர் நெட்­வொர்க்' என்ற இளை­யர் தொண்­டூ­ழிய அறப்­பணி அமைப்பு ஏற்­பாடு செய்த கலந்­துரை­யா­டல் மற்­றும் உடன்­பாட்டு கையெ­ழுத்து நிகழ்ச்­சி­யில் அவர்­கள் இரு­வ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

இளை­யர்­கள் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­ப­ட­வும் சமூ­கத்­திற்குத் தொண்­டாற்­ற­வும் மேலும் பல வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தற்­குத் தோதாக எஸ்ஜி கேர்ஸ், தெமா­செக் அற­நி­று­வ­னம் ஆகி­ய­வற்­று­டன் இரண்டு உடன்­பா­டு­களில் இந்த அறப்­பணி கட்­ட­மைப்பு நேற்று கையெ­ழுத்­திட்­டது.

கட்­ட­மைப்­பின் தலை­மைப் புர­வ­ல­ராக இருக்­கும் திரு ஹெங், "ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு சிறு முயற்சியை மேற்­கொள்­வ­தன் மூலம் மேலும் பல­வற்­றைச் சாதிக்க நம்­மால் முடி­யும்," என்­றார்.

அதே­போல நம் அக்­க­றைக்­குரிய அம்­சங்­களில் கவ­னத்தை இப்போது நாம் திருப்ப முடி­யும் என்று தெரி­வித்த அமைச்­சர் திரு டோங், இந்த முயற்­சி­யில் தொண்­டூ­ழி­யம் மூலா­தா­ர­மா­னது என்று தான் நம்­பு­வ­தா­கக் கூறி­னார்.

"இளை­யர்­கள் வேலை தேடும்­போது தேவைப்­ப­டக்­கூ­டிய உயிர்­நா­டி­யான தேர்ச்­சி­க­ளைப் பெறு­வ­தற்குத் தொண்­டூ­ழி­யம் உத­வு­கிறது. அதே­வே­ளை­யில், சமூக குழுக்­களுக்கு இடை­யில் இணைப்புப் பாலத்­தை­யும் தொண்­டூ­ழி­யம் அமைக்­கிறது," என்றார் திரு டோங்.

கொவிட்-19 பாதிப்­பு­கள், ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற பிரச்­சி­னை­கள் இருந்­தா­லும் எதிர்­கா­லத்தை நம்­பிக்­கை­யு­டன் எதிர்­நோக்க சிறந்­த­ மு­றை­யில் சிங்­கப்­பூர் இளை­ஞர்­கள் தயா­ராக இருக்­கி­றார்­கள் என்று இரு­வ­ரும் தெரி­வித்­த­னர்.

இத­னி­டையே, இந்­தக் கட்­ட­மைப்பு 320 இளை­யர்­களை உள்­ள­டக்கி நடத்­திய ஓர் ஆய்வு, 85 விழுக்­காட்டு இளை­ஞர்­கள் தங்­கள் எதிர்­கா­லம் பற்றி நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தாகத் தெரி­விக்­கிறது.

கல்வி, பயிற்சி, சமூ­கம், சமூக ஆத­ரவு, எதிர்­கால வேலை வாய்ப்பு­கள் ஆகி­யவை தாங்­கள் நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தற்­கான முக்­கிய கார­ணங்­கள் என்று அந்த இளை­ஞர்­கள் தெரி­வித்ததாகவும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.