'எல்லையைத் திறக்க மலேசியா ஆவன செய்ய வேண்டும்'

'எல்லையைத் திறக்க மலேசியா ஆவன செய்ய வேண்டும்'

2 mins read
0785ad39-6a3e-452a-bd77-f0ffdbdd7a19
-

சிங்­கப்­பூர்-மலே­சியா எல்லை கடந்த 13 மாத கால­மாக மூடியே இருக்­கிறது. இத­னால் குடும்­பங்­கள் பெரும் சங்­க­டங்­க­ளுக்கு, மன உளைச்­சலுக்கு, பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளாகிவிட்­டன.

ஆகை­யால் எல்­லை­யைத் திறக்க தேவை­யானவற்றைச் செய்ய மலேசிய அர­சாங்­கம் மேலும் முயல வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

சென்ற ஆண்டு மார்ச் 18 முதல் எல்லை மூடியே இருப்­ப­தால், அன்­பர்­க­ளைப் பார்க்க முடி­யாத அவல நிலை ஒரு­பக்­கம் இருக்க, குடும்­பங்­களில் மனச்சோர்­வும் பிரச்­சினை­களும் அதி­க­மாகி இருப்­ப­தாக மலே­சியா- சிங்­கப்­பூர் ஊழி­யர் சிறப்­புப் பணிக்­குழுவின் தலை­வர் தயா­ளன் ஸ்ரீபா­லன் தெரி­வித்­தார்.

குடும்­பத்­தில் கள்­ளத் தொடர்பு ஏற்­பட்­டு­விட்டதாகக் கூறி சட்ட உதவி கேட்டு பல­ரும் தன்­னு­டன் தொடர்­பு­கொண்டு வரு­வ­தாக அவர் கூறி­னார்.

இந்த விவ­கா­ரம் கார­ண­மாக பல குடும்­பங்­கள் உடைந்­து­போய்­விட்­ட­தா­க­வும் திரு தயா­ளன் தெரி­வித்­தார். இதேபோன்ற சம்­ப­வம் கார­ண­மாக அண்­மை­யில் ஒரு மாது தன் உயிரை மாய்த்­துக்கொண்­ட­தா­க­வும் ஒரு பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் மலே­சி­யர்­களில் பல­ரும் அதிக செலவு காரணமாக மலே­சி­யா­வில் உள்ள தங்­கள் குடும்­பத்­துக்­குப் பணம் அனுப்ப இய­லாத நிலை­யில் இருப்­ப­தாக அவர் மேலும் தெரி­வித்­தார்.

ஓர் ஊழி­யர் தனி­மை­யில் இருப்­ப­தற்­கான $2,100 தொகை­யைச் செல­விட்டு அவரைக் கொஞ்ச நாட்­களுக்கு விடுப்­பில் மலே­சி­யா­வுக்கு அனுப்பி வைக்க முத­லா­ளி­கள் முன்­வ­ரு­வ­தில்லை. கார­ணம் அப்­படி மலே­சியா செல்­லும் ஊழி­யர்­கள் திரு­ம்பி வரா­மல் அங்­கேயே தங்கி­வி­டக்­கூ­டும் என்று முத­லா­ளி­கள் தயங்­கு­கி­றார்­கள் என்று திரு தயா­ளன் விளக்­கி­னார்.

இத­னி­டையே, மலே­சி­யப் பிர­தமர் முகை­தீன் யாசின் அடுத்த மாதம் சிங்­கப்­பூர் பிர­த­ம­ரைச் சந்­திக்­கும்­போது எல்­லைப் பிரச்­சினை­களுக்­குத் தீர்வு காண்­பது பற்றி ஆராய வேண்­டும் என்று மலேசியா வின் பாசிர் கூடாங் தொகுதி நாடாளு­மன்ற உறுப்­பி­னர் ஹாசன் கரீம் கருத்­துரைத்­தார்.

தன் தொகு­தி­வாசி ஒரு­வர் சிங்­கப்­பூ­ரில் மருத்­து­வத் துறை­யில் துப்­பு­ர­வா­ள­ராக வேலை பார்ப்­ப­தா­க­வும் மலே­சி­யா­விற்­குத் திரும்பி பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்ட தன் கண­வ­ருக்கு உத­வக்­கூட இய­லாத நிலை தனக்கு ஏற்­பட்டுவிட்­டதை நினைத்து அவர் மனம் உடைந்து போய்­விட்­ட­தா­க­வும் அந்த உறுப்­பி­னர் கூறி­னார்.

அந்த மாது சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்டுக்­கொண்­டார். மலே­சியா திரும்­பி­னால் தனக்கு வேலை போய்­வி­டும் என்று அவர் அஞ்சு கிறார்.

சிங்­கப்­பூ­ரில் கீழே விழுந்து தன் கையில் காயம் அடைந்­து­விட்ட அந்த மாது தன் நிலையை நினைத்து கவ­லை­யு­டன் தனி­யாக நாட்­க­ளைக் கடத்­து­வ­தா­க­வும் பாசிர் கூடாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்­பி­னர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள மலே­சி­யர்­கள் தனிமைக் கட்­டுப்­பாடு இன்றி மலே­சியா திரும்ப அனு­ம­திக்­கப்­பட வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.