தொலைதொடர்பு மருத்துவ சேவைக்கு புதிய உரிம முறை

தொலைதொடர்பு மருத்துவ சேவைக்கு புதிய உரிம முறை

1 mins read
d33137d1-903b-44b4-b02d-fda476312e08
-

தொலைதொடர்பு வழியில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளுக்கு உரிம முறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிடுகிறது.

2018ஆம் ஆண்டில் இதன் தொடர்பிலான விதிமுறைக் கட்டமைப்பைத் தொடங்கிய அமைச்சு, தனது இலக்குகளை எட்டியுள்ளதாக இவ்வாண்டு பிப்ரவரி தெரிவித்தது. சில கட்டுப்பாடுகளுக்கு இணங்க உடன்பட்ட தொலைதொடர்பு மருத்துவ சிகிச்சையை வழங்கும் நிறுவனங்களின் பெயர்களைக் கொண்டுள்ள விருப்பத்தின் பெயரிலான பட்டியலை அமைச்சு பிப்ரவரியின்போது வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இப்போது 600 நிறுவனங்களும் அமைப்புகளும் இணைந்துள்ளன.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் அமைப்புகளும் மட்டுமே சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தையும் மெடிசெவ் திட்டத்தையும் பயன்படுத்தும் தெரிவை காணொளி வழியான மருத்துவ ஆலோசனையை வழங்க முடிகின்றது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மனக்கலக்கம் உள்ளிட்ட இருபது நோய்களுக்காக இது பயன்படுத்தப்படலாம்.

சுகாதார சேவைகள் மசோதாவுக்கு நாடாளுமன்றம் இவ்வாண்டு ஜனவரியின்போது ஒப்புதல் அளித்தது. அந்தப் புதிய சட்டம் மார்ச் 2023க்குள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.