டாக்சி ஓட்டுநர் ஒருவரை ஓர் ஆடவர் குத்தி கீழே வீழ்த்தியதைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கிளார்க் கீ வட்டாரத்தில் ரிவர் வேலி ரோட்டிலுள்ள டாக்சி நிறுத்துமிடத்தில் அவ்விரு ஆடவர்களுக்கும் இடையே நேர்ந்த கைகலப்பை மறைவாகப் படம் எடுத்த ஸ்டாம்ப் வாசகர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இந்தச் சம்பவம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று இரவு கிட்டத்தட்ட 10.36 மணிக்கு நடந்ததாக காணொளியை அனுப்பியவர் தெரிவித்தார். டாக்சி ஓட்டுநரை அந்த இளையர் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்ததாகக் காணொளியை அனுப்பிய பெண் ஸ்டாம்ப் தளத்திடம் தெரிவித்தார்.
வன்மமாக நடந்துகொண்ட அந்த இளையரைத் தடுக்க, கறுப்பு நிற உடை அணிந்திருந்த பெண் ஒருவர் முன்வந்ததும் காணொளியில் தென்பட்டது.
இந்தக் கைகலப்புக்கான காரணம் அறியப்படவில்லை. இருந்தபோதும் இதன் தொடர்பில் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக போலிசார் ஸ்டாம்ப் தளத்திடம் தெரிவித்தனர்.