தொடர்ந்து நாடப்படும் தொலைத்தொடர்பு மருத்துவம்

தொடர்ந்து நாடப்படும் தொலைத்தொடர்பு மருத்துவம்

2 mins read
1e64ba57-4deb-4b51-a2bd-6bfae9491c4f
-

ஒரே ஆண்­டில் தொலைத்­தொ­டர்பு மருத்­துவ சேவை­களை நாடும் வழக்­கம் அதி­க­ரித்­து­விட்ட நிலை­யில், இனி பழைய நிலைக்­குத் திரும்ப முடி­யாது என்­றா­கி­விட்­டது.

தொலைத்­தொ­டர்பு முறை­யில் வழங்­கப்­படும் மருத்­துவ சேவை­க­ளின் பயன்­பாடு, கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பாட்­டுக்­குள் வந்த பிற­கும் நீடிக்­கிறது.

நாள்­பட்ட நோய்­கள், அறுவை சிகிச்­சைக்­குப் பிந்­திய ஆலோ­ச­னை­கள், நீண்­ட­கால மற்­றும் வலி­யைக் குறைப்­ப­தற்­கான பரா­ம­ரிப்பு போன்ற சேவை­களை தனி­யார் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­களும் பொது சகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கழ­கங்­களும் வழங்­கும் போக்கு அதி­கரித்­துள்­ளது.

காணொளி மூலம் மருத்­துவ ஆலோ­சனை பெற்ற வழக்­க­மும் சென்ற ஆண்­டி­று­தி­யில் அதி­க­ரித்­த­தாக ஒருங்­கி­ணைந்த சுகா­தார தக­வல் செயல்­மு­றை­க­ளின் தர­வு­கள் தெரி­வித்­துள்­ளன.

தொலைத்­தொ­டர்பு மருத்­து­வம் என்­பது புதி­தான ஓர் அம்­சம் அல்ல. இதற்­கான முன்­னோட்­டத் திட்­டம் பத்­தாண்­டுக்கு முன்பே தொடங்­கி­யது. 2017ஆம் ஆண்­டில் காணொளி வழி மருத்­துவ ஆலோ­சனை பெறு­வது, ஆறு பொது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கழ­கங்­களில் முன்­னோட்­டம் கண்­டது.

ஆனால் பொது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த சுமார் 1,947 நோயா­ளி­கள் மட்­டுமே, 2017க்கும் சென்ற ஆண்­டின் தொடக்­கத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் தொலைத்­தொ­டர்பு மருத்­து­வச் சேவை­களை நாடி­னர்.

அதை­ய­டுத்து, கொள்­ளை­நோய் சூழ­லால் இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் அந்த எண்­ணிக்கை 36,000ஐ எட்டி­விட்­டது.

பொது மருத்­து­வ­ம­னை­கள், பல்­வேறு பல­துறை மருந்­த­கங்­கள், பொது மருத்­துவ நிலை­யங்­கள், சமூ­கச் சேவை அமைப்­பு­கள் ஆகிய 14 இடங்­கள் அடங்­கிய 125 பொது சுகா­தார பரா­ம­ரிப்­புக் கழ­கங்­கள், 7,500க்கும் மேற்­பட்ட காணொளி மருத்­துவ ஆலோ­சனை அமர்­வு­களை நடத்­தி­யுள்­ளன.

மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் சிறப்பு வெளி­நோ­யாளி மருந்­த­கங்­க­ளி­லும் மக்­கள் கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்த தொலைத்­தொ­டர்பு மருத்­துவ சேவை கைகொ­டுக்­கும். மேலும் நோயா­ளி­கள் தங்­க­ளின் பயண நேரத்­தை­யும் மருத்­து­வ­ரைக் காண்­ப­தற்­காக முன்­ப­திவு செய்து காத்­தி­ருக்­கும் நேரத்­தை­யும் மிச்­சப்­படுத்­தி­ட­லாம்.

இந்­நி­லை­யில், தொலைத்­தொடர்பு மருத்­து­வச் சேவை வழங்­கு­நர்­க­ளின் பட்­டி­ய­லில் தற்­போது 600க்கும் மேற்­பட்ட பெயர்­கள் இடம்­பெற்­றுள்­ளன. குறிப்­பிட்ட சில கட்­டுப்­பா­டு­க­ளைக் கடைப்­பி­டிக்க ஒப்­பு­தல் அளித்­துள்ள இந்த வழங்­கு­நர்­கள், தொண்­டூ­ழி­யம் அடிப்­ப­டை­யில் பட்­டி­ய­லில் சேர்ந்­துள்­ள­னர். அத்­து­டன் அமைச்­சின் தொலைத்­தொ­டர்பு மருத்­து­வம் தொடர்­பான மின்­ப­யிற்­சி­யை­யும் வழங்­கு­நர்­கள் முடித்­தி­ருக்க வேண்­டும்.

நேரடி மருத்­துவ சேவையை நாடும் முறை, பல­ரா­லும் விரும்­பப்­பட்­டா­லும் தொலைத்­தொ­டர்பு மருத்­துவ சேவை பெறும் வழக்­கத்தை மேலும் பலர் ஏற்­றுக்­கொள்­ளத் தொடங்­கி­யுள்­ள­னர்.

நட­மா­டு­வ­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கு­வோர் அல்­லது மருந்­த­கத்­தில் காத்­தி­ருக்க பொறு­மை­யில்லா கற்­றல் குறை­பாடு உள்­ள­வர்­க­ளுக்கு இத்­த­கைய தொலைத்­தொ­டர்பு மருத்­து­வச் சேவை நிச்­ச­யம் உதவி­யாக இருக்­கும் என்­றார் ஒரு மருத்­துவ நிபு­ணர்.

இந்­நி­லை­யில், மூத்த நோயாளி­களுக்­குக் கூடு­தல் மருத்­துவ உதவி தேவைப்­படும் நிலை­யில் தொலைத்­தொ­டர்பு முறை விரும்­பப்­படும் ஓர் அம்­ச­மாக தற்­போது இல்­லா­மல் போக­லாம் என்று கூறப்­படு­கிறது.