தமிழ் மொழிப் புழக்கத்தை ஊக்குவிக்கும் வழிகளை ஆராய்ந்த 'முத்துச்சிதறல்'

தமிழ் மொழிப் புழக்கத்தை ஊக்குவிக்கும் வழிகளை ஆராய்ந்த 'முத்துச்சிதறல்'

2 mins read
9fd139c1-0247-4231-90cd-f5334df0802c
தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கமும் வளர்தமிழ் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், தமிழ் மொழியை வாழும் மொழியாக்குவது குறித்துப் பேசப்பட்டது. படம்: தமிழ் முரசு -

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

இளை­யர்­கள் மத்­தி­யில் தமிழ் மொழிப் புழக்­கத்தை ஊக்­கு­விக்­கும் வழி­க­ளைப் பற்­றி­யும் அவர்­கள் எதிர்­கொள்­ளும் சவால்­களை ஆராய்ந்­தது 'முத்­துச்­சி­த­றல் 2' நிகழ்ச்சி. இரண்­டா­வது ஆண்­டாக உம­றுப்­பு­ல­வர் தமிழ் உயர்­நி­லைப்­பள்ளி முன்­னாள் மாண­வர் சங்­கம், சென்ற வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று இணை­யம் வாயி­லாக இந்­நி­கழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தது.

'இல்­லங்­களில் தமிழ்ப் புழக்­கம்' என்ற கருப்­பொ­ரு­ளைக் கொண்ட நிகழ்ச்­சி­யில், தேசி­யக் கல்­விக் கழக ஆசிய மொழி­கள் மற்­றும் பண்­பா­டு­கள் துறை­யின் துணைத் தலை­வ­ரா­க­வும் தமிழ்ப் பகு­திக்­குப் பொறுப்பு வகிப்­ப­வ­ரு­மான முனை­வர் சீதா­லட்­சுமி, பிர­பல பேச்­சா­ள­ரும் பெற்­றோ­ருக்­கான பயிற்­று­விப்­பா­ள­ரு­மான திரு­மதி சரோ­ஜினி பத்­ம­நா­தன், அர­சாங்க அதி­காரி குமாரி அத்­தினா மைக்­கல் ஆகி­யோர் உரை­யாற்­றி­னர்.

தமிழ் மொழியை இளை­யர்­களி­டையே ஊக்­கு­விக்­கும் முறை­களைப் பற்றி முனை­வர் சீதா­லட்­சுமி பேசி­னார். இல்­லங்­களில் தமிழ் மொழிப் புழக்­கம் குறித்த கணக்­கெ­டுப்­பு­க­ளை­யும் தமிழ்க்­கல்வி குறித்த மறு­ஆய்­வு­க­ளை­யும் மக்­களின் எண்­ணங்­க­ளை­யும் பகிர்ந்­த­தோடு தமிழ் மொழியை இளை­யர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தும் வகை­யில் பல்­வேறு பரிந்­து­ரை­களை­யும் முன்­வைத்­தார்.

தமிழ் மொழிப் புழக்­கத்தை இளை­யர்­க­ளி­டையே மேம்­ப­டுத்த நாம் என்ன செய்­ய­லாம் என்­பது குறித்து திரு­மதி சரோ­ஜினி பகிர்ந்து­கொண்­டார். வீடு, பள்­ளிப் பரு­வம், சமூ­கம், தலை­வர்­கள், உல­க­ளா­விய தொழில் துறை­கள், நாடு, எதிர்­கா­லம் போன்ற முக்­கிய அம்­சங்­கள் இளை­ஞர்­க­ளின் தமிழ் ஆர்­வத்தை வளர்க்க எவ்­வாறு உத­வு­கின்­றன என்­ப­து பற்­றி­ பேசி­னார்.

சிங்­கப்­பூர் இளை­யர்­கள் தமிழ் மொழி­யில் பேசு­வ­தில் சந்­திக்­கும் இடர்­பா­டு­கள் குறித்து குமாரி அத்­தினா பேசி­னார். இளை­யர்­க­ளின் கண்­ணோட்­டத்­தில் அவர்­க­ளின் தமிழ்ப் புழக்­கம் ஏன் குறை­கிறது என்ற வெவ்­வேறு கார­ணங்­களை விளக்­கி­னார். தமி­ழில் பேசும் ஒரு­வரை ஊக்­கு­விக்க வேண்­டும் எனக் கூறி­ய­து­டன், அவ்­வாறு பேசும்­போது ஆங்­கி­லத்­தை­யும் கலந்து பேசி­னால் அவர்­க­ளைக் கேலி செய்­யக்­கூ­டாது என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

வெவ்­வேறு பள்­ளி­களில் படிக்­கும் மாண­வர்­கள், தமிழ் மொழி­யில் பேசு­வ­தில் அவர்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளைக் காணொளி காட்­சி­கள் மூலம் பகிர்ந்­து­கொண்­ட­னர். அவற்­றில் பெரும்­பா­லோர் தமிழ் மொழியை விட ஆங்­கில மொழி­யின் எளி­மையே முக்­கிய கார­ண­மா­கக் கூறி­னர். அதே நேரத்­தில், மற்ற சில மாண­வர்­கள் தமிழ் மொழி­யில் பேசு­வது தங்­க­ளுக்­குச் சிர­மம் இல்லை என்­றும் கூறி­னார்­கள். சிறு வய­தி­லி­ருந்தே தமிழ் மொழி­யைக் கற்­ற­தா­லும், குடும்­பம் மற்­றும் நண்­பர்­க­ளு­டன் நாள்­தோ­றும் பேசு­வ­தா­லும் எளி­மை­யாக தமி­ழில் பேச முடி­கிறது என்­ற­னர்.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட வளர்­த­மிழ் இயக்­கத் தலை­வர் திரு சு மனோ­க­ரன், "2006ல் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்­றில், தமிழ் பேசாத சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் 60% என்று தெரி­ய­வந்­தது. எதிர்­கா­லத்­தில் தமிழ் மொழி சிங்­கப்­பூ­ரில் இருக்­குமா என்ற பயத்தை அது ஏற்­ப­டுத்­தி­யது. அத்­த­கைய ஒரு சூழ்­நி­லை­யைத் தவிர்க்­கவே தமிழ் மொழி சார்ந்த பல்­வேறு நிகழ்ச்­சி­களை வளர்­த­மிழ் இயக்­கம் நடத்தி வரு­கிறது. முக்­கி­ய­மாக, தமிழ் மொழி வாழும் மொழி­யாக இருக்க வேண்­டும் என்­பதே எங்­கள் நோக்­கம்," என்­றார்.

உம­றுப்­பு­ல­வர் தமிழ் உயர்­நி­லைப்­பள்ளி முன்­னாள் மாண­வர் சங்­கத்­தின் தலை­வர் திரு பொன் சுந்­த­ர­ராசு, வாய்ப்­ப­ளித்த வளர்­த­மிழ் இயக்­கத்­திற்கு நன்றி தெரி­வித்­தார்.