கொவிட்-19 தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து விளக்கம்

கொவிட்-19 தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து விளக்கம்

2 mins read
4e37f044-af84-45c4-a7e8-81cc85c1089d
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள், கை வலி, காய்ச்­சல், அசதி எனத் தங்­க­ளுக்கு ஏற்­பட்ட பக்­க­வி­ளை­வு­கள் பற்றி பகிர்ந்­து­கொண்டு வரு­கின்­ற­னர். இந்­தப் பக்­க­வி­ளை­வு­களால் சற்று அசௌ­க­ரி­யம் ஏற்­பட்­டா­லும், நம் உட­லின் நோய் எதிர்ப்பு சக்­தி­யின் செயல்­பாட்­டையே அவை குறிப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட இளை­யர்­கள் சில­ருக்கு ஏற்­பட்ட பக்­க­வி­ளை­வு­கள், முதி­யோ­ரைக் காட்­டி­லும் மோச­மாக இருந்த நிலை­யும் உண்டு.

'ஃபைசர்', 'மொடர்னா' தடுப்­பூசி­கள் தொடர்­பி­லான மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளின் முடி­வு­களை இவை பிர­தி­ப­லிப்­ப­தாக இரு சாரா­ரின் அனு­ப­வங்­களும் அமைந்­துள்­ளன.

இதன்­படி, 18 வய­துக்­கும் 55 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள், தங்­க­ளுக்­குக் காய்ச்­சல், அசதி, தலை­வலி, ஊசி குத்­திய இடத்­தில் நோவு போன்ற பக்­க­வி­ளை­வு­களை, 56 வய­துக்­கும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ருக்­கும் ஏற்­பட்­டதை விட பலமுறை அனு­ப­வித்­த­தாக 'ஃபைசர்' தடுப்­பூசி தொடர்­பான பரி­சோ­தனை முடி­வு­களில் தெரிய வந்­துள்­ளது.

'மொடர்னா' தடுப்­பூசி தொடர்­பி­லும் அதே போக்கு தென்­பட்­டது. 18 வய­துக்­கும் 64 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு, 65 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­யோ­ருக்கு ஏற்­பட்­ட­தைக் காட்டி­லும் கூடு­த­லாக பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­பட்­டன.

மேலும், இரண்­டா­வது தடுப்­பூசிக்­குப் பிறகு பக்­க­வி­ளை­வு­கள் அதி­க­ரித்­த­தாக இரு வகை தடுப்­பூசி தொடர்­பி­லும் மேற்­கொள்­ளப்­பட்ட மருத்­து­வப் பரி­சோ­தனை முடி­வு­கள் கூறு­கின்­றன.

இந்­நி­லை­யில், வலு­வான நோய் எதிர்ப்பு சக்­தி­யு­டை­ய­வர்­கள், தடுப்­பூ­சி­யின் பக்­க­வி­ளை­வு­களை மேலும் நன்கு உணர்­வார்­கள் என்று நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

குறிப்­பாக, இளை­யர்­கள் மற்­றும் பெண்­கள் பக்­க­வி­ளை­வு­களை அதி­க­மாக உண­ரக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், பக்­க­வி­ளை­வு­களை உண­ரா­மல் இருந்­தால் தடுப்­பூ­சி­யின் ஆற்­றல் குறைவு என்­றா­கி­வி­டாது என்­றார் ஒரு நிபு­ணர். அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி வழி கிடைக்­கும் பாது­காப்பு சமம்­தான் என்று குறிப்­பி­டப்­பட்­டது.

"நமது நோய் எதிர்ப்பு சக்தி செயல்­ப­டு­கிறது என்­ப­தற்கு ஒரு நல்ல அறி­கு­றி­யாக இந்த காய்ச்­சல், வலி போன்ற பக்­க­வி­ளை­வு­களைக் கருத வேண்­டும்," என்­றார் தொற்று நோய் நிபு­ணர் ஒரு­வர்.

இருப்­பி­னும், முதி­ய­வர்­க­ளி­டையே தடுப்­பூ­சி­யின் ஆற்­றல் குறித்து ஆழ­மான ஆய்­வு­கள் இன்­னும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

வயது கார­ண­மாக முதி­ய­வர்­களுக்­குப் போடப்­படும் தடுப்­பூசி, சற்று ஆற்­றல் குறைந்­த­தாக இருக்­க­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஆனா­லும், வய­தா­ன­வர்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது ஊக்­கு­விக்­கப்­ப­டு­கிறது.

"நோயை எதிர்க்­கும் ஆற்­ற­லும் முதிர்ச்சி அடை­யும் நிலை­யில், முதி­யோ­ருக்கு நோய்க்­கான கடு­மை­யான அறி­கு­றி­கள் ஏற்­படும் சாத்­தி­யம் அதி­கம். இத­னால் தொற்­றுக்கு ஆளா­கித் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அவர் சேர்க்­கப்­ப­ட­லாம், அல்­லது அவர் உயி­ரி­ழக்­க­வும் நேரி­ட­லாம்," என்­றார் அவர்.

இதற்­கி­டையே, முதியவர்களுக்கு உள்ள வேறு மருத்­து­வப் பிரச்­சினை­கள் கார­ண­மா­க­வும் தடுப்­பூசி போட்டுக்கொண்ட பிறகு அவர்களது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்­றல் பாதிக்­கப்­ப­ட­லாம் என்­றார் ஒரு நிபு­ணர்.