சாலைகளில் விதிமீறிய 34 சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர்

சாலைகளில் விதிமீறிய 34 சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர்

2 mins read
f2410e15-a573-44ac-837d-264a9647f35b
சைக்கிளோட்டிகள் விதிமீறுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அதி­கா­ரி­கள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். படம்: நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கம் -

ஆயர் ராஜா விரை­வுச்­சாலை, வெஸ்ட் கோஸ்ட் ஹைவே, புக்­கிட் தீமா மற்­றும் தானா மேரா கோஸ்ட் ரோடு ஆகிய இடங்­களில் போக்­கு­ வ­ரத்து போலி­சார் மேற்­கொண்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­களில் இரு தினங்­களில் 34 சைக்­கி­ளோட்­டி­கள் சாலை­களில் விதிமீ­றல்­களில் ஈடு­பட்­டது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

"பெரும்­பா­லான சைக்­கி­ளோட்­டி­கள் விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­னர். 16 சைக்­கி­ளோட்­டி­கள் தலைக்­க­வ­சம் இன்றி சாலை­களில் சென்­ற­னர்," என்று நிலப் போக்­கு­ வ­ரத்து ஆணை­யம் குறிப்­பிட்­டது.

போக்­கு­வ­ரத்து சமிக்ஞை விளக்கு­ சிவப்­பாக இருந்­த­போது அத­னைப் பொருட்­ப­டுத்­தாது சென்ற 16 சைக்­கி­ளோட்­டி­கள் பிடி­பட்­ட­னர். சாலை­யில் மற்ற வாக­னங்­கள் சென்­ற­தற்கு எதிர்த்திசை­யில் சைக்­கி­ளோட்­டி­ய­தாக இரு­வர் சிக்கினர்.

பலர் சைக்­கி­ளோட்­டு­வது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்ட நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், சாலை­களில் பாது­காப்பை மன­தில் இருத்த வேண்­டும் என்­றது. விதி­மு­றை­களை மதித்து சைக்­கிள்­ ஓட்டி, மற்­ற­வர்­க­ளின் மீது அக்­க­றை­யு­ட­னும் கரு­ணை­யு­ட­னும் நடந்து­ கொள்­ளும்­படி சைக்­கி­ளோட்­டி­களை ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டது.

சாலை விதி­மு­றை­களை மீறி ஒரு குழு சைக்­கி­ளோட்­டிச் செல்­வ­தைக் காட்­டும் காணொ­ளியை அண்­மை­யில் உள்­ளூர் நடி­கர் டே பிங் ஹுய் பகிர்ந்­­த­து­டன், இது­போன்ற பல பிரச்­சி­னை­க­ளைத் தாம் ஏதிர்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்டு, அனைத்து சைக்­கிள்­க­ளை­யும் பதிவு செய்­யும் முறை­யைக் கொண்­டு­வ­ர­வும் பரிந்­து­ரைத்­தார்.

மேலும் பலர் சைக்­கி­ளோட்­டி­

க­ளுக்குக் கடு­மை­யான விதி­மு­றை­கள் தேவை எனக் குரல்­கொ­டுத்­

த­தை­ய­டுத்து, சாலை­களில் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்குத் தற்­போ­தி­ருக்­கும் விதி­மு­றை­க­ளை­யும் சைக்­கி­ளோட்­டி­கள் தேர்வு எழு­து­வ­தும் அவர்­க­ளுக்கு உரி­ம­மும் தேவையா என்­பது குறித்தும் குழு ஒன்று ஆரா­யும் என கடந்த 12ஆம் தேதி போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் அறி­வித்­தார். பொதுமக்களிடம் கருத்து கேட்டு மறுஆய்வு செய்ய ஆக்டிவ் மொபிலிட்டி ஆலோசனைக் குழு பல மாதங்கள் எடுக்கக்கூடும் என்றார் அவர்.