குடும்பத்துக்குள் இருக்கும் நபரே சிறுபிள்ளைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும்போது, அந்தப் பிள்ளை பாதுகாப்பாக இருப்பதை குழந்தைப் பாதுகாப்புச் சேவை (சிபிஎஸ்) உறுதி செய்கிறது.
அந்தப் பிள்ளைக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபருடன் பிள்ளையைத் தனியாக விடாமல் பார்த்துக்கொள்ளும் ஒருவரின் பாதுகாப்பில் பிள்ளை விடப்படும் என்று சிபிஎஸ் விசாரணைக் குழுவின் மேலாளர் நூருல் நடியா முகம்மது நூர், 29 கூறினார்.
பிள்ளையின் விருப்பமும் அறிந்து முடிவு செய்யப்படும் என்றார் அவர். பின்னர், பிள்ளைகளின் வாழ்க்கை தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்புத் திட்டம் ஒன்று வரையறுக்கப்படும்.
பிள்ளைக்குத் தொல்லை கொடுத்தவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, பிள்ளைகளுக்கு இனிமேல் பிரச்சினை இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பாதுகாப்புத் திட்டம் மீட்டுக்கொள்ளப்படும் என்றார் அவர்.

