'நல்லெண்ணம் உருவாக்குவது முக்கியம்'

'நல்லெண்ணம் உருவாக்குவது முக்கியம்'

1 mins read
3d3f567e-4157-41c7-b83c-a9ff5cbefa51
-

கடு­மை­யான பாலி­யல் குற்­றங்­களை விசா­ரிக்­கும் போலிஸ் அதி­காரி என்ற முறை­யில், விசா­ரணை செய்­யும்­போது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பு­ப்ப­டுத்­தும் விதத்­தில் பேசு­வ­தன் மூலம் பிரச்­சி­னை­களை எளி­தில் தீர்க்க முடி­யும் என்று துணை கண்­கா­ணிப்­பா­ளர் கெர் பூன் டாட், 34, கூறி­னார்.

குற்­றச் செயல்­க­ளைக் கண்­டு­பி­டிக்க, கூடிய விரை­வில் தேவை­யான தக­வல்­க­ளைத் திரட்ட வேண்­டி­யுள்­ள­தால், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் நல்­ல­தொரு உறவை கட்­டி­ய­மைப்­பது முக்­கி­யம் என்­றார் அவர்.

பாலி­யல் தொடர்­பி­லான கடு­மை­யான குற்­றங்­க­ளின் தொடர்­பில் விசா­ரிக்­கும் அதி­கா­ரி­களை வழி­ந­டத்­தும் அவர் குற்­ற­வி­யல் விசா­ர­ணைத் துறை­யின் கடு­மை­யான பாலி­யல் குற்­றப் பிரிவு அதி­காரி. குறிப்­பாக, சிறு பிள்­ளை­க­ளி­டம் விசா­ரிக்­கும்­போது அவர்­க­ளி­ட­மி­ருந்து சரி­யான தக­வல்

­க­ளைப் பெறு­வது சவா­லா­னது என்­கி­றார் அவர்.

"முன்­பின் தெரி­யா­த­வர்­க­ளி­டம் பிள்­ளை­கள் அவ்­வ­ளவு எளி­தில் பேசி­வி­ட­மாட்­டார்­கள். அத­னால், அவர்­க­ளுக்­குப் பாது­காப்­பான சூழலை உரு­வாக்­கும் முயற்­சி­களை போலிஸ் விரிவுபடுத்­தி­யுள்­ளது. மன­ந­லம், சமு­தா­யப் பணி, ஆலோ­ச­கர்­கள் போன்ற பின்­ன­ணி­க­ளைக் கொண்ட தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் இணைந்து போலி­சார் செயல்­ப­டு­கின்­ற­னர்.

"போலிஸ் அதி­கா­ரி­கள், மருத்து ­வர்­கள், குழந்தைப் பாது­காப்பு அலு­வ­லர்­கள் என அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய ஒரே விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தன் மூலம் தங்­க­ளுக்கு நேர்ந்த கொடு­மை­யான சம்­ப­வங்­க­ளைப் பற்றி பிள்­ளை­கள் பல­முறை நினை­வு­கூ­ர­வேண்­டி­யி­ருக்­காது.

"குற்­றம் புரிந்­த­வர் குடும்ப உறுப்­பி­ன­ராக இருந்­தால், சாட்­சி­க­ளின் கூற்று விசா­ர­ணைக்­குத் தடை­யாக இருக்­க­லாம்," என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு செப்­டம்­பர் முதல் கடு­மை­யான பாலி­யல் குற்­றம் தொடர்­பான விசா­ர­ணை­கள் காணொ­ளிப் பதிவு செய்­யப்­ப­டு­கின்றன.