சமூகத்தில் ஒருவர் உட்பட புதிதாக 20 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிப்பு

சமூகத்தில் ஒருவர் உட்பட புதிதாக 20 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிப்பு

2 mins read
dda7a904-1306-4b07-afcf-65723d2c3a93
-

சிங்­கப்­பூ­ரில் மேலும் இரு­பது பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அவர்­களில் ஒரு­வர் சமூ­கத்­தில் இருப்­ப­வர். எஞ்­சிய 19 பேரும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் அவர்­கள் அனை­வ­ருக்­கும் இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது அல்­லது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் சமூ­கத்­தில் ஒரு­வ­ருக்கு கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது. அவர் 39 வயது இந்­தோ­னீ­சிய ஆட­வர் என்­றும் அதி­கம் பர­வும் திறன்­கொண்ட 'பி117' வகை கிரு­மி­யால் அவர் பாதிக்­கப்­பட்­டு இ­ருப்­பது முதற்­கட்­டச் சோதனை முடிவு காட்­டி­யது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த ஆட­வர் கப்­ப­லில் பணி­பு­ரி­ப­வர் என்­றும் கொவிட்-19 பரி­சோ­தனை, தடுப்­பூசி தவிர்த்து வேறு எதற்­கா­க­வும் அவர் கப்­ப­லை­விட்டு வெளி­யே­றி­ய­தில்லை என்­றும் சொல்­லப்­பட்­டது.

கொரோனா தொற்­றி­ய­தற்­கான எந்த அறி­கு­றி­யும் அவ­ரி­டம் தென்­ப­ட­வில்லை. கடந்த வியா­ழக்­கி­ழமை அட்­ட­வ­ணைப்­படி செய்­யப்­படும் வழக்­க­மான பரி­சோ­த­னை­யின்­போது அவரை கொரோனா தொற்றி­ இ­ருந்­தது தெரி­ய­வந்­தது.

மறு­நாள் அறி­விக்­கப்­பட்ட தொகுதி மாதிரி பரி­சோ­தனை முடி­வி­லும் அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது. அதைத் தொடர்ந்து, பின்­னர் அவர் அவ­சர மருத்­துவ ஊர்தி மூல­மாக தேசிய தொற்­று­நோய்த் தடுப்பு மையத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

அன்­றைய நாளில் மேற்­கொள்­ளப்­பட்ட தனி­ந­பர் பரி­சோ­த­னை­யிலும் அவரை கொரோனா தொற்றி­ இருந்­தது உறு­தி­யா­னது.

கடந்த வியா­ழ­னன்று அவர் முத­லா­வது கொவிட்-19 தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்­டார். ஆயி­னும், தடுப்­பூ­சி­யில் கொரோனா கிருமி இல்லை என்­ப­தால் தடுப்­பூசி போட்­டதன் மூல­மாக அவ­ரைக் கிருமி தொற்­றி­யி­ருக்க வாய்ப்­பில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இரண்­டா­வது தடுப்­பூசி போட்டு சில வாரங்­க­ளுக்­குப் பிறகே ஒரு­வர் கொரோனா நோய்த் தடுப்­பாற்­ற­லைப் பெறு­வார் என்­ப­தால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­குச் சற்று­முன் அல்­லது தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிறிது நேரத்­திற்­குப்­பின் அவர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட வாய்ப்­புண்டு என்று அமைச்சு கூறி­யது.

இதைத் தொடர்ந்து, அந்த இந்­தோ­னீ­சிய ஆட­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பி­லி­ருந்­த­வர்­கள் அடை­யாளம் காணப்­பட்டு, தனி­மைப்­படுத்­தப்­பட்­டுள்­ள­னர்.