400 வேலையிடங்களில் பாதுகாப்புச் சோதனை

400 வேலையிடங்களில் பாதுகாப்புச் சோதனை

2 mins read
86d1339e-4161-487f-83d8-59797e9f34fd
பாதுகாப்புச் சோதனை நடத்தும் மனிதவள அமைச்சு அதிகாரிகளுடன் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (வலமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மனி­த­வள அமைச்சு அடுத்த மாதத்­தி­லி­ருந்­தது ஜூன் மாதம் வரை 400 வேலை­யி­டங்­களில் பாது­காப்­புச் சோத­னை­களை நடத்­த­வி­ருக்­கிறது.

கட்­டு­மா­னம், உற்­பத்தி போன்ற அதிக ஆபத்­து­ இருக்­கும் துறை­யைச் சேர்ந்த வேலை­யி­டங்­களில் சோத­னை­ நடத்­தப்­படும்.

இந்­தப் பாது­காப்­புச் சோத­னைக்கு 'ஆப்­ப­ரே­ஷன் ஐபிஸ்' என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

வழக்­க­மாக நடத்­தப்­படும் சோத­னை­க­ளு­டன் இந்­தப் பாது­காப்­புச் சோத­னை­யும் நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு உற்­பத்­தித் துறை­யைச் சேர்ந்த வேலை­யி­டங்­களில் ஆறு உயி­ரி­ழப்­பு­கள் நிகழ்ந்­தன. 2019ஆம் ஆண்­டில் நான்கு பேர் மாண்­ட­னர்.

இதன் கார­ண­மாக இத்­து­றை­யில் தமது அமைச்சு கூடு­தல் கவ­னம் செலுத்­தும் என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நேற்று தெரி­வித்­தார்.

மற்ற துறைகளைச் சேர்ந்த வேலையிடங்களைக் காட்டிலும் உற்பத்தித் துறையைச் சேர்ந்த வேலையிடங்களில் ஆக அதிகமானோர் காயமுற்றனர்.

110 பேருக்கு மிக மோசமான காயங்கள் ஏற்பட்டன. 2,300க்கும் மேற்பட்டோருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.

காயம் அடைந்த உற்பத்தித் துறை ஊழியர்களில் 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு இயந்திரங்கள் காரணமாக காயங்கள் ஏற்பட்டன.

இந்த நிலை கவலை அளிப்­ப­தாக திரு ஸாக்கி தெரி­வித்­தார்.

48 பேருக்­குக் கை, கால் இழப்பு ஏற்­பட்­டதை அவர் சுட்­டி­னார்.

"இந்த விகி­தம் மிக­வும் அதி­கம். கை, கால் இழந்த ஒவ்­வொ­ரு­வ­ரின் வாழ்­வா­தா­ரம் மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

"எனவே, உற்­பத்­தித் துறை­யில் கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­பட வேண்­டும். இத்­து­றை­யில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை எவ்­வாறு மேம்­ப­டுத்­த­லாம் என்­பது குறித்து ஆராய வேண்­டும்," என்று ஜூரோங்­கில் உள்ள பழைய உலோ­கங்­களை மறு­சு­ழற்சி செய்­யும் நிலை­ய­மான எசுன் இன்­டர்­நே­ஷ­ன­லில் நேற்று நடை­பெற்ற வேலை­யி­டப் பாது­காப்­புச் சோத­னை­யைப் பார்­வை­யிட சென்ற திரு ஸாக்கி கூறி­னார்.

போக்­கு­வ­ரத்து நிர்­வா­கம், இயந்­தி­ரப் பரா­ம­ரிப்பு போன்­ற­வற்­றில் குறை­பாடு கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தால் அந்த நிறு­வ­னத்­துக்கு வேலை நிறுத்த ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சோதனை குறித்து அந்த நிறு­வ­னத்­துக்கு முன்­கூட்­டியே தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்க நிறவனங்களை ஊக்குவிப்பது குறித்து அமைச்சு ஆராய்வதாக திரு ஸாக்கி கூறினார்.