கனமழை காரணமாக சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் கடந்த சனிக்கிழமையன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இது பருவநிலை மாற்றத்துக்கான அறிகுறி என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று தெரிவித்தார்.
இப்பிரச்சினையை எதிர்கொள்ள திட்டமிடுதல் மிகவும் முக்கியம் என்பதை இது உணர்த்துவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. அடிக்கடி கனமழை பெய்வதை நாம் பார்க்கிறோம்," என்று ஆழ்சுரங்க நீர் முறைக்கான இடத்தைப் பார்வையிட சென்றபோது செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
அமைச்சர் ஃபூவின் அமைச்சின்கீழ் செயல்படும் பொதுப்
பயனீட்டுக் கழகம், சாக்கடை மேம்பாட்டுப் பணிகளுக்குக் கடந்த பத்து ஆண்டுகளாக $2 பில்லியன் செலவு செய்துள்ளது.
இந்தப் பணிகளுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ $1.4 பில்லியன் செலவு செய்யப்படும் என்று அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.

