தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவனக்குறைவுடன் லாரியை ஓட்டியதாக ஆடவர் கைது

2 mins read
5728ef97-d811-4eae-8346-eef2b7a4256e
'டிப்பர்' லாரியுடன் ஊழியர்கள் இருந்த வெள்ளை நிற லாரி மோதியது. (இடது படம்): காயமடைந்த ஊழியர்களுக்கு உதவி வழங்கும் மருத்துவப் பணியாளர்கள். படங்கள்: வான்பாவ் -
multi-img1 of 2

தீவு விரைவுச்சாலையில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து

தீவு விரை­வுச்­சா­லை­யின் ஓரத்தில் நேற்­றுக் காலை நின்­றி­ருந்த 'டிப்­பர்' லாரி­யு­டன் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் 17 பேரை ஏற்­றிச் சென்ற லாரி மோதி­ய­தில் 33 வயது ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

காய­ம­டைந்த அந்த ஊழி­யர் மருத்­து­வ­ம­னை­யில் மர­ண­ம­டைந்­தார். இவ்­வி­பத்­தில் காய­முற்ற மற்ற 16 ஊழி­யர்­களும் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

கவ­னக்­கு­றை­வு­டன் வாக­னம் ஓட்டி விபத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறி அந்த லாரி­யின் 36 வயது ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டார்.

சாங்கி விமான நிலை­யத்தை நோக்­கிச் செல்­லும் தீவு விரை­வுச்­சா­லை­யில், ஜாலான் பகார் வெளி­வ­ழிக்கு முன்­பாக நிகழ்ந்த இவ்­வி­பத்து குறித்து காலை 6.06 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தாக போலிஸ் தெரி­வித்­தது.

லாரி­யின் பின்­ப­கு­தி­யில் ஊழி­யர்­கள் இரு­வர் சிக்­கிக்­கொண்­ட­தா­க­வும் அவர்­க­ளைக் கரு­வி­க­ளின் துணை­யு­டன் மீட்­ட­தா­க­வும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

லாரி­யில் சென்­ற­வர்­கள் 23 முதல் 46 வய­துக்­குட்­பட்­ட­வர்­கள் என்­றும் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­கும் இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னைக்­கும் அவர்­கள் அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த விபத்­துக்­குப் பின் வெளிநாட்டு ஊழி­யர்­கள் இரு­வர் சுய­நி­னைவை இழந்­த­தாக போலிஸ் குறிப்­பிட்­டது.

விபத்து தொடர்­பான ஒரு காணொளி ஃபேஸ்புக் சமூக ஊட­கத்­தில் நேற்று பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

ஆட­வர் பலர் சாலை­யில் விழுந்து கிடப்­ப­தை­யும் குறைந்­தது இரு அவ­சர மருத்­துவ வாக­னங்­களும் ஒரு தீய­ணைப்பு வண்­டி­யும் அவ்­வி­டத்­தில் நின்­றி­ருந்­த­தை­யும் அக்­கா­ணொளி காட்­டு­கிறது.

இவ்­வி­பத்து கார­ண­மாக பைனி­யர் ரோடு நார்த் வரை போக்­கு­வரத்து நெரி­சல் ஏற்­பட்­ட­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.

விபத்­துக்­குள்­ளான லாரி­யில் பய­ணம் செய்த அனை­வ­ரும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்­றும் அவர்­கள் 'பிரைட் ஏஷியா கன்ஸ்ட்­ரக்­‌ஷன்' நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் என்­றும் அறி­யப்­ப­டு­வ­தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்­பிட்­டது.

'பிரைட் ஏஷியா கன்ஸ்ட்­ரக்­‌ஷன்' நிறு­வ­னத்­தைத் தொடர்­பு­கொண்­ட­போது, விசா­ரணை நடந்­து­வ­ரு­கிறது என்­றும் வேறெ­து­வும் கூறு­வ­தற்­கில்லை என்­றும் நிறு­வ­னத் தரப்பு தெரி­வித்­த­தா­க­வும் அச்­செய்தி கூறி­யது.