தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்ளின் சமூக மன்றத்தின் மீது விழுந்த மரம் இரு நாள்கள் கழித்து அப்புறப்படுத்தப்பட்டது

2 mins read
a0522d07-fd02-41bd-a6a3-242fdfd007c7
தங்ளின் சமூக மன்றத்தில் உள்ள ஓர் அறையின் மேற்கூரை மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. படம்: ஷின்மின் -

சிங்­கப்­பூ­ரில் கடந்த சனிக்­கி­ழமை பிற்­ப­கல் பெய்த கன­ம­ழை­யின் கார­ண­மாக தங்­ளின் சமூக மன்­றத்­தில் உள்ள ஓர் அறை­யின் மேற்­கூ­ரை­ மீது மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்­தது. இத­னால் அந்த அறை­யின் மேற்­கூரைக்­குச் சேதம் ஏற்­பட்­டது.

விட்லி சாலைக்கு அருகே மேல்கம் பார்க்­கில் மரம் விழுந்த சம்­ப­வம் குறித்து அன்­றி­ரவு 8.30 மணிக்கு தனக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­ட­தாக தேசிய பூங்­காக் கழகம் தெரி­வித்­தது.

வேறோடு சாய்ந்து விழுந்த அந்த மரத்­தின் உய­ரம் 24 மீட்­ட­ருக்­கும் அதி­கம். அதன் சுற்­ற­ளவு 4.6 மீட்­டர் இருக்­கும். அந்த மரம் விழுந்து இரண்டு நாள்­கள் ஆன நிலை­யில், கடந்த திங்­கட்­கி­ழமை மாலை 5 மணிக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வத்­தில் எவ­ருக்­கும் காயம் ஏற்­பட்­ட­தாக தக­வல் இல்லை. தேசிய பூங்­காக் கழக ஊழி­யர்­கள் அவர்­க­ளது பணியை மேற்­கொள்­வதற்­காக பாதிக்­கப்­பட்ட பகு­தி­யைச் சுற்றி தடுப்­பு­வேலி போடப்­பட்­ட­தாக தங்­ளின் சமூக மன்ற நிர்­வா­கக் குழுத் தலை­வர் சுவா லாய் டெக் சொன்­னார்.

தங்­ளின் சமூக மன்­றத்­திலோ அல்­லது அந்­தக் கட்­ட­டத்­திற்கு அரு­கிலோ நடத்­தப்­படும் வகுப்­பு­கள் அடுத்த அறி­விப்பு வெளி­யிடப்­படும் வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் திரு சுவா தெரி­வித்­தார்.

தங்­ளின் சமூக மன்­றத்­தின் மீது அந்த மரம் விழுந்­த­போது அக்­கட்­ட­டத்­தின் அறை­களில் ஒன்­றில் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரும் அவ­ரது உத­வி­யா­ளர் ஒரு­வ­ரும் இருந்­த­தாக சீன நாளி­த­ழான சாவ்­பாவ் தெரி­வித்­தது.

ஆனால், அவ்­வி­ரு­வ­ருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் மரங்­கள் ஆறு முதல் 24 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை பொது­வாக பரி­சோ­திக்­கப்­ப­டு­வ­தாக தேசிய பூங்­காக் கழ­கம் தெரி­வித்­தது. மரங்­க­ளின் தன்மை, அவற்­றின் வயது போன்­ற­வற்றை பொறுத்து அவை பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும் கால­கட்­டம் வேறு­படும் என்­றும் கழ­கம் விவ­ரித்­தது.

மரங்­க­ளின் அமைப்­பை­யும் அவற்­றின் சம­நி­லை­யை­யும் மேம்­படுத்த அவற்­றின் கிளை­கள் சிறிது காலத்­திற்கு ஒரு­முறை வெட்­டப்­படு­கின்­றன.

மோச­மான வானிலை காலத்­தில் மரங்­க­ளைப் பரி­சோ­திக்­கும் முறை தீவி­ரப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இதைச் செய்­வ­தன் மூலம் மரங்­கள் சாய்ந்து விழும் அபா­யம் குறைக்­கப்­ப­டு­கிறது.

கடந்த சனிக்­கி­ழமை பிற்­ப­கல் பெய்த கன­ம­ழை­யால் தீவின் பல பகு­தி­க­ளி­லும், குறிப்­பாக மேற்கு மற்­றும் மத்­திய பகு­தி­களில், திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது.

தீவின் மேற்­குப் பகு­தி­யில் அன்று நண்­ப­கல் 12.25 மணிக்­கும் பிற்­ப­கல் 3.25 மணிக்­கும் இடை­யில் ஆக அதி­க­மாக 161.4 மில்­லி­மிட்­டர் அளவு மழை­நீர் பதி­வானது.

லோவர் டெல்டா சாலை­யில் கார் ஒன்­றின் மீதும் அன்று மரக்­கிளை விழுந்­த­தில் அந்த காரின் முன்­ப­கு­தி­யில் உள்ள கண்­ணாடி நொறுங்­கி­யது.