'கவலைகள் இருந்தாலும் முடிவு அவசியம்'

'கவலைகள் இருந்தாலும் முடிவு அவசியம்'

4 mins read
eef01f7e-eafe-42af-bf32-505d492c5375
-

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

குடும்­பத்­தைப் பிரிந்து சிங்­கப்­பூ­ரில் பணிபுரிந்து வரும் திரு வெ. மாணிக்­க­வா­ச­கத்­திற்கு சிங்­கப்­பூர் அரசு இந்­திய பய­ணி­க­ளுக்கு அண்­மை­யில் அறி­வித்த பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் மேலும் ஏமாற்­றத்­தைத் தந்­துள்­ளது.

தன் அம்­மா­வின் உடல்­நலக் குறைவு கார­ணத்­தி­னால் ஜன­வரி 9ஆம் தேதியன்று இந்­தியா சென்ற 40 வயது திரு வெ. மாணிக்­க­வா­ச­கம், மார்ச் 27ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ருக்கு திரும்ப முடி­ய­வில்லை. மேற்­பார்­வை­யா­ள­ராகப் பணி­யாற்­றும் இவர், இரு ஆண்­டு­க­ளுக்கு முன் தன் குடும்­பத்­திற்கு சார்ந்­தி­ருப்­போர் அட்டையை விண்­ணப்­பிக்க தகு­திப் பெற்­றி­ருந்­தார். எனி­னும், கொவிட்-19 சூழ்­நி­லை­யி­னால் அதை இந்­நாள் வரை­யி­லும் அவ­ரால் பெற முடி­ய­வில்லை. மேலும், கைக்குழந்­தை­யு­டன் இச்­சூழ்­நி­லை­யில் பய­ணம் செய்­வது சாத்­தி­ய­மில்­லா­ததால், தன் மனை­வி­யை­யும் குழந்­தை­க­ளை­யும் பிரிந்து சிங்­கப்­பூ­ரில் வசிக்­கி­றார்.

2013ல் திரு­ம­ணம் செய்த திரு மாணிக்­க­வா­ச­கம் தன் குடும்­பத்தை ஓர் ஆண்­டிற்குச் சில முறை

மட்­டுமே சந்­தித்து வரு­கி­றார். தமிழ் நாட்­டின் விழுப்­பு­ரம் மாவட்­டத்தை சேர்ந்த அவ­ரின் குடும்­பத்­திற்கு ஆத­ர­வாக அவ­ரின் அண்­ண­னின் குடும்­பம் உள்­ளது.

இந்­தி­யா­வி­லி­ருந்து வரும் அனைத்துப் பய­ணி­களும் 14 நாட்கள் பிரத்­தி­யேக இடங்­களில் இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றி­ய­பின், மேலும் 7 நாட்­கள் தங்­கள் வசிப்­பி­டத்­தில் தனி­மைப்­

ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என சுகா­தார அமைச்சு அண்­மை­யில் அறி­வித்­தது. இந்த உத்­த­ரவு இன்று இரவு 11:59 மணிக்கு நடப்­புக்கு வரு­கிறது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 பர­வல் மோச­ம­டைந்­துள்­ள­தால் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் அல்­லா­தோ­ருக்­கான நுழைவு அனு­மதி வழங்­கப்­ப­டு­வ­தும் குறைக்­கப்­பட்டு வரு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. வெளி­நாட்­டில் இருந்து வரு­வோர் மூலம் கிருமித்தொற்­று் அபா­யத்­தைக் குறைக்­க­வும் பொதுச் சுகா­தா­ரத்­தைப் பாது­காக்­க­வும் இந்­ந­ட­வ­டிக்­கை­கள் உத­வும் என அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

இதுகுறித்து தமிழ் முர­சி­டம் பேசிய பல சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் இந்தப் புதிய முடிவு மேலும் ஏமாற்­றத்­தை­யும் இரு நாட்­டுப் பய­ணம் குறித்த நிலை­யில்லாச் சூழ­லை­யும் ஏற்­ப­டுத்தி உள்­ளது என்­ற­னர்.

எனி­னும், இந்­தி­யா­வில் கொவிட்-19 சூழல் நாளுக்கு நாள் மோச­ம­டைந்து வரும் வேளை­யில் இந்தக் கட்­டுப்­பாடு­கள் தேவை­

யா­னது­தான் என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

"தனி­மைப்­ப­டுத்­து­வது நல்ல வி‌‌ஷ­யம்­தான். இது நம்­மை­யும் மற்­ற­வர்­க­ளை­யும் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து பாதுக்­காக்­கும். வீட்­டி­லேயே இருந்து வெளியே செல்­லா­மல் இருப்­பது சிர­ம­மாக இருந்­தா­லும், குடும்­பத்­து­டன் தொடர்­பு­கொள்­வ­தற்கு தொழில்­நுட்­பம் பல்­வேறு வழி­களில் உத­வு­கிறது. இந்த சம­யத்­தில் பொறு­மையை கடைப்­பி­டிப்­பதைத் தவிர வேறு ஒன்­றும் செய்ய முடி­யாது," என்று கூறி­னார் திரு மாணிக்­க­வா­ச­கம்.

தனக்கு சிகிச்சை பெறு­வ­தற்­காக கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் இந்­தியா சென்ற 40 வயது திரு மணி­மா­றன் அக்­டோ­பர் வரை சிங்­கப்­பூ­ருக்கு திரும்ப முடி­ய­வில்லை. எஸ் பாஸ்-ல் அன­லை­சர் மூத்த தொழில்­நுட்ப வல்­லு­ந­ராக (Analyser Senior Technician) பணிப் புரி­யும் இவ­ரும் தன் மனை­வி­யை­யும் குழந்­தை­க­ளை­யும் பிரிந்து சிங்­கப்­பூ­ரில் வசிக்­கி­றார். 2018-ல் அவ­ரது மனை­வி­யின் சார்ந்­தி­ருப்­போர் அட்டை விண்ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இதைத் தொடர்ந்து அவ­ரின் குடும்­பத்­தார் இந்­தி­யா­வில் வசித்து வரு­கின்­ற­னர். அவர் மீண்­டும் இந்­தி­யா­விற்கு திரும்ப வேண்­டும் என்று அவர் குடும்­பத்­தி­னர் விரும்­பி­னா­லும், குழந்­தை­க­ளின் எதிர்­கா­லத்­திற்­கா­கவே சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து வேலை செய்­வ­தாக கூறி­னார் திரு மணி­மா­றன்.

"இந்த 21 நாள்­கள் தனிமை படுத்­து­வ­தற்­கான கார­ணம் இந்­தி­யா­வில் கொவிட்-19 நோயால் அவ­திப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பது தான். சிங்­கப்­பூர் மக்­களை பாது­காக்­கும் வகை­யில் இந்த உத்­த­ரவு பிறப்பிக்­கப்­பட்­டுள்­ளது. இது சரி­யான முடிவு என்று நான் நினைக்­கி­றேன். நாமும் இதை ஏற்­றுக்­கொண்டு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும்," என்று கூறி­னார். புதி­தாக அறி­மு­க­மான இந்த உத்­த­ரவு சில சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் பாதித்­துள்­ளது. கூடு­தல் 7 நாள்­கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்­டும் என்­ப­தால் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்­கும் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து இந்­தி­யா­விற்கு போவ­தற்­கும் பலர் தயக்­கம் காட்­டு­கின்­ற­னர்.

சென்­னை­யில் தன் கண­வ­ரு­டன் வசிக்­கும் டிஜி­ப­சா­ரின் நிறு­வ­ன­ரான 25 வயது சிங்­கப்­பூ­ரர் ரிது­மிதா சர­வ­ணன், திரு­ம­ணத்­திற்கு பின் வீட்­டி­லி­ருந்து வேலை செய்து வரு­கி­றார். 3 மாதத்­திற்கு ஒரு முறை சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் அவ­ரின் குடும்­பத்­தாரை பார்க்க வரும் அவர், ஊர­டங்கு தொடங்­கிய முதல் அவர்­களை சந்­திக்க வர முடி­ய­வில்லை. தற்­ச­ம­யம் சிங்­கப்­பூ­ரில் வேலை வாய்ப்­பு­களை தேடும் ரிது­மிதா, "இணை­யம் வழி வேலை­கள் தேடு­வ­தும் நேர்­கா­ணல்­களில் கலந்­துகொள்­வ­தும் சாத்­தி­ய­மாக இருந்­தா­லும், தனி­மைப் படுத்­தும் காலகட்­டம் தற்­போது 21 நாள்­க­ளுக்கு கூடி­ய­தால், புது வேலை­யில் சேர்­வ­தற்கு கிட்­டத்­தட்ட ஒரு மாத காலம் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கிறது," என்று பகிர்ந்­தார்.

ஒவ்­வோர் ஆண்­டும் நோன்­புப் பெரு­நாள் காலத்­தில் இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டிற்­குச் சென்று உற­வி­னர்­க­ளு­டன் கொண்­டா­டும் பழக்­கம் கொண்­டி­ருக்­கும் சிங்­கப்­பூ­ரர் திரு நூர் முகம்­மது, 76, இவ்­வாண்­டும் போவ­தற்­கான திட்­ட­மிட்­டி­ருந்­தார். ஒரு மாத ரம­லான் நோன்­பில் கடைசி பத்து நாட்­களில் கிளம்­ப­லாம் என்று எண்ணி, தாமும் தமது மனை­வி­யும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டு காத்­தி­ருக்­கின்­ற­னர்.

"இந்­தப் புதிய கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­து­டன் நான் திட்­டத்தை ரத்து செய்ய முடி­வெ­டுத்­துள்­ளேன். நாடு திரும்­பும்­போது 14 நாட்­கள் ஹோட்­ட­லில் இருந்­து­விட்டு வரு­வதே பெரும் க‌ஷ்­டம். இருப்­பி­னும் வேறு வழி­யில்லை என்று மன­த­ள­வில் தயார்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தோம். ஆனால் இப்­போது மேலும் 7 நாட்­கள் வீட்­டில் இருக்­க­வேண்­டும் என்­றால் அது இன்­னும் சிர­மம்," என்­றார் அவர்.

"முக்­கி­ய­மாக இந்­தி­யா­வில் கொரோனா பிரச்­சினை தலை­வி­றித்­தா­டும் இந்த நேரத்­தில் அங்­கு செல்­வது சரி­யில்லை. ஆபத்­தான விளை­வாக இருக்­குமோ என்ற அச்­ச­மும் இந்த முடி­வுக்­குக் கார­ணம்," என்­றார் அவர்.

இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரு­வோர் இரு­வார இல்­லத் தனிமை உத்­த­ர­வின் முடி­வி­லும் கூடு­தல் ஏழு நாள்­கள் இல்­லத் தனி­மை­யின் இறு­தி­யி­லும் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்படு­வர். கட்­டு­மா­னம், கடல்­துறை, செய்­முறை தொழில்­து­றை­க­ளைச் சேர்ந்த இந்­திய ஊழி­யர்­கள் தங்­க­ளது தாய்­நாட்­டில் இருந்து வந்­த­பின் 21 நாள்­கள் இல்­லத் தனிமை உத்­த­ர­வின்­கீழ் இருக்­கும் நடை­முறை தொட­ரும்.