சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் 15 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,880ஆக அதிகரித்துள்ளது.
சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.

