சிங்கப்பூர் உணவு முகவை தலைமை இயக்குநரின் தனிப்பட்ட உதவியாளர் மீது அரசாங்க ரகசியச் சட்டத்தின்கீழ் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு 'சர்க்கியூட் பிரேக்கர்' எனப்படும் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு காலத்தின்போது பள்ளிகள் மூடுவது தொடர்பான தகவல்
களைக் கசியவிட்டதன் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நூராயின் ஜூப்லி எனும் 38 வயது மாது மீது தவறான தொடர்பு தகவல் என இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதே வாரத்தில் பதிவான அத்தகைய இரண்டாவது வழக்கு இது.
அவரது கணவர் கைருல்
அன்வார் ஸக்காரியா, 39, மீது அத்தகைய ஒரு குற்றச்சாட்டும் தவறான தொடர்பு தகவலுக்காக ஒரு குற்றச்சாட்டும் பதிவானது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் கூட்டு ஊடக அறிக்கை வரைவிலிருந்து அந்தத் தகவல் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
பள்ளிகள், உயர் கல்விக் கழகங்களில் முழுக்க முழுக்க இல்ல அடிப்படையிலான கற்றல் திட்டம் நடப்புக்கு வருவது, பாலர்பள்ளிகள் மற்றும் மாணவர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்படுவது குறித்த தகவல்கள் அந்த வரைவில் இருந்தன.
ரகசியத் தகவல் என வகைப்
படுத்தப்பட்ட அதனை தலைமை இயக்குநரின் மின்னஞ்சல் பெட்டகத்லிதிருந்து எடுத்து, அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்படு
வதற்கு முன்பாகவே, தம் கணவருக்கு அனுப்பினார் நூராயின்.
இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி புகார் பெற்றதாக நேற்று முன்தினம் இரவு போலிஸ் தெரிவித்தது.
தனது கணினித் திரையில் இருந்து இந்தத் தகவலைப் புகைப்படமாக எடுத்து நூராயின் தம் கணவருக்கு அனுப்பினார். அவரது கணவர் அந்தப் படத்தை 13 பேர் கொண்ட வாட்சப் குழுவில் தம் நண்பர்களுக்கு அனுப்பினார்.
கணவர் கேட்டதற்கிணங்க, கொவிட்-19 நோய்ப் பரவல் முறி
யடிப்பு காலகட்டத்தில் தொடர்ந்து செயல்படும் அத்தியாவசியச் சேவைகளின் பட்டியலையும் புகைப்படம் எடுத்து அனுப்பினார் நூராயின்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $2,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் போலிஸ் விசாரணை தொடங்கியது முதல் வேலையிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார் நூராயின்.
இவர்கள் அனுப்பிய தகவலைப் பெற்ற, மற்றவர்களுக்கு அனுப்பிய 16 பேருக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக போலிஸ் தெரிவித்தது.

