ஈசூனில் எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழியர் நிலையம் திறப்பு

ஈசூனில் எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழியர் நிலையம் திறப்பு

2 mins read
9cc68791-f83a-40b7-954d-5ace138ea537
-

ஈசூ­னில் இருக்­கும் எஸ்ஜி கேர்ஸ் தொண்­டூ­ழி­யர் நிலை­யம் தொண்­டூ­ழி­யர்­களை சேவை­களில் ஈடு­ப­டுத்தி, வளங்­களை ஒருங்­கி­ணைத்து சமு­தாய சேவை முக­வை­களை இணைத்து, கூட்டு திட்­டப்­பணி முயற்­சி­களை மேற்­கொண்டு சமூ­கத் தேவை­களை நிறை­வேற்­று­வ­தில் முக்­கி­யப் பங்­காற்­று­கிறது.

ஈசூ­னில் கடந்த ஆண்டு அக்­டோ­பர் முதல் செயல்­பட்டு வரும் அந்த நிலை­யம் நேற்று அதி­கா­ரப்­பூர்­வ­மா­கத் திறந்து வைக்­கப்­பட்­டது. சமூக வளங்­களை

ஒன்­று­தி­ரட்டி தேவைப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு உத­வும் 'கேம்­பஸ்­இம்­பாக்ட்' திட்­டத்தை உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர்

முகம்­மது ஃபைசால் இப்­ரா­கிம் பாராட்­டி­னார்.

உள்­ளூர் இளை­யர் அறக்­கொடை அமைப்­பான 'கேம்­பஸ்­இம்­பாக்ட்' திட்­டத்­தின்­கீழ் சிறு­வர்­க­ளுக்குப் பாடம் கற்­பித்­தல், ஆலோ­சனை வழங்­கு­தல் போன்ற சேவை­கள் செய்­யப்­ப­டு­கின்­றன.

திரு­வாட்டி லிலி­யன் சுவா, 60, பணி­யி­லி­ருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்­தத் திட்­டத்­தின்­கீழ் தொண்­டூ­ழி­யம் செய்து வரு­கி­றார். "குழந்­தை­கள்­தான் நமது சமு­தா­யத்­தின் அடிப்­படை. அவர்­களை மெரு­கேற்­று­வது எதிர்­கா­லத்­தில் நல்ல சமு­தா­யத்­துக்கு வழி­வ­குக்­கும்," என்று திரு­வாட்டி சுவா குறிப்­

பிட்­டார்.

நிலை­யத்­தின் திறப்பு நிகழ்­வின்­போது இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைசால், "உதவி தேவைப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு உதவி செய்ய சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே விருப்­பம் உள்­ளது. 'எஸ்ஜி கேர்ஸ் தொண்­டூ­ழி­யர் நிலை­யம்' பொது­மக்­கள், பொதுத்­துறை மற்­றும் தனி­யார் துறை­க­ளுக்கு அதற்­கான தளத்தை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கிறது," என்­றார்.

ஈசூ­னில் இருக்­கும் அந்த நிலை­யத்­தில் செயல்­படும் 'கேம்­பஸ்­இம்­பாக்ட்' திட்­டம் 7 முதல் 17 வய­துக்­குட்­பட்ட 150 பிள்­ளை­க­ளுக்குப் பாடம் கற்­பித்­தல், நடன சிகிச்சை, ஆலோ­சனை வழங்­கு­தல் போன்ற சேவை­களில் ஆத­ரவு வழங்­கு­கிறது.

எஸ்ஜி கேர்ஸ் தொண்­டூ­ழி­யர் நிலை­யம் போன்ற சமூக அடிப்­ப­டை­யி­லான அமைப்­பு­களை அமைப்­பது 2018ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் முதல் முக்­கிய முயற்­சி­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் அத்­த­கைய 14 நிலை­யங்­களில் 10,000க்கு மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் 71,000க்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு சேவை வழங்கி வரு­கின்­ற­னர்.

நாட்டின் 24 நகரங்களிலும் 2022ஆம் ஆண்டுக்குள் அத்தகைய நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் அங்கமாக இந்த நிலையம் அமைகிறது.