தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி சுவாசக் கருவிகள் விற்றவர் கைது; $201,000 மதிப்பிலான 41,000 சுவாசக் கருவிகள் பறிமுதல்

2 mins read
52fae2f0-02d0-4e3c-9f4f-1c6b50eed224
-

போலி என சந்­தே­கிக்­கப்­படும் சுவா­சக் கரு­வி­களை இணை­யம் வழி­யாக விற்­பனை செய்­வ­தன் தொடர்­பில் 34 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். முதல்­மு­றை­யாக இத்­த­கைய குற்­றம் நிகழ்ந்­துள்ள நிலை­யில், அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட சோத­னை­யில் 41,000க்கும் அதி­க­மான போலி சுவா­சக் கரு­வி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

அந்த மருத்­துவ தர சாத­னம் கொவிட்-19க்கு எதி­ரான போரில் சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளைப் பாது­காப்­ப­தில் முக்­கி­யப் பங்கு வகிக்­கிறது. அந்­தச் சாத­னங்­களை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து அந்த ஆட­வர் கொண்டு வந்­தி­ருக்­க­லாம் என போலி­சா­ரும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் இணைந்து நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

கடந்த ஆண்டு மே மாதம் கொவிட்-19 தொடர்­பு­டைய பொருள்­கள் எனக் குறிப்­பிட்டு இணை­யம் வழி­யாக விற்­பனை செய்­யப்­பட்ட 1,700க்கும் அதி­க­மான பொருள்­களை ஆணை­யம் நீக்­கி­யது. அவற்­றில் 47 விழுக்­காட்டுப் பொருள்­கள் பரி­சோ­த­னைச் சாத­னங்­கள், சுவா­சக் கரு­வி­கள் போன்ற மருத்­துவ சாத­னங்­கள்.

கொரோனா கிரு­மித்­தொற்று காலத்­தில் மக்­க­ளின் மன­நி­லையைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு இத்­த­கைய போலிப் பொருள்­களை விற்ற 1,600க்கும் அதி­க­மான விற்­ப­னை­யா­ளர்­கள், நிறு­வ­னங்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கைக் கடி­தங்­கள் அனுப்­பப்­பட்­டன. இம்­மா­தம் 12ஆம் தேதி குற்­ற­வி­யல் விசா­ர­ணைத் துறை, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யில் கைப்­பற்­றப்­பட்ட போலி வர்த்­தக முத்­திரை கொண்­டி­ருப்­ப­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் சுவா­சக் கரு­வி­க­ளின் சந்­தை­விலை $201,000க்கும் அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கைப்­பற்­றப்­பட்ட சுவா­சக் கரு­வி­கள் போலி­யா­ன­வையா என்­பதை உறுதி செய்­யப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூட்­ட­றிக்கை குறிப்­பிட்­டது.

சுகா­தா­ரப் பொருள்­கள் சட்­டத்­தின்­கீழ் போலி சுகா­தா­ரப் பொருள்­களை இறக்­கு­மதி செய்­வது, விற்­பனை செய்­வது போன்ற செயல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு $100,000 வரை அப­ரா­தம், மூன்­றாண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம். விசா­ரணை தொடர்­கிறது.

வர்த்­தக முத்­தி­ரை­கள் சட்­டத்­தின்­கீழ், குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால் ஐந்து ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, $100,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

அறி­வு­சார் சொத்­து­ரிமை மீறல்­களில் ஈடு­ப­டு­வது கடும் குற்­ற­மா­கக் கரு­தப்­படும் என போலி­சார் எச்­ச­ரித்­துள்­ள­னர்.