கடுமையாக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

கடுமையாக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

3 mins read
cbe6d34d-4561-482a-9635-98958244f19c
குவாலிட்டி ஹோட்டல் மார்லோவில் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு வெளிநாட்டு ஊழியர்களின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ் தங்கு விடு­தி­யில் இவ்­வா­ரம் கண்­ட­றி­யப்­பட்ட புதிய கொவிட்-19 சம்­பவ குழு­மத்­தால் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் உட­ன­டி­யாக மேலும் கடு­மை­யாக்­கப்­பட உள்­ளன.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யி­லி­ருந்து சமூ­கத்­திற்கு உரு­மா­றிய கிரு­மி­யின் தொற்று ஏற்­ப­டு­வ­தைத் தடுப்­ப­தற்­கா­கவே இந்த நட­வ­டிக்­கையை எடுப்­ப­தாக

அமைச்­சு­கள் நிலை பணிக்­குழு நேற்று தெரி­வித்­தது. இருப்­பி­னும் இந்­தி­யா­வி­லி­ருந்து அந்­தப் புதிய கொவிட்-19 கிரு­மி­தான் வெஸ்ட்­லைட் உட்­லண்ட்­ஸில் ஏற்­பட்ட புதிய சம்­ப­வங்­க­ளுக்­குக் கார­ணம் என்பதற்கான எந்த ஆதா­ர­மும் இல்லை என்­பதை பணிக்­குழு வலி­யு­றுத்­தி­யது.

கூடு­தல் அபா­ய­முள்ள நாடு­கள், பகு­தி­க­ளி­லி­ருந்து வரும் அனைத்துப் புதிய வெளி­நாட்டு ஊழி­யர்­களும் 14 நாள் இல்­லத் தனிமை உத்­த­ரவை பிரத்­யேக வச­தி­களில் பின்­பற்­ற­வேண்­டும். 'சிரா­லஜி' பரி­சோ­த­னை­யில் முன்பு கிரு­மித் தொற்று ஏற்­பட்­டது தெரி­ய­வந்­த­வர்­களும் இல்­லத் தனிமை உத்­த­ரவை மேற்­கொள்ள வேண்­டும் என்று மனி­த­வள இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­தார்.

கொவிட்-19 பரி­சோ­தனை முடித்­த­வு­டன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரும் ஊழி­யர்­க­ளின் தற்­கா­லிகத் தங்­கு­மி­டத்­தில் கூடு­தல் ஏழு நாள் சோதனை முறையை மேற்­கொள்­ள­வேண்­டும். அங்­கி­ருந்து வெளி­யே­றும் முன்­னர் மேலும் ஒரு கொவிட்-19 'பிசி­ஆர்' சோத­னையை மேற்­கொள்­ள­வேண்­டும்.

இதற்கு முன்பு பிரத்­யேக தங்­கும் வச­தி­களில் நான்கு நாட்­கள் மட்­டுமே ஊழி­யர்­களில் சிலர் தங்க வேண்­டி­யி­ருந்­தது. அதற்கு பின்­னர் விரைவு கட்­டு­மான விடு­தி­களில் மீத­முள்ள இல்­லத் தனிமை உத்­த­ரவை மேற்­கொள்­வர். ஏழு நாள் பரி­சோ­தனை முறை­யை­யும் பின்­பற்­று­வார்­கள்.

'சிரோ­லஜி' பரி­சோ­த­னை­யில் முன்பு தொற்று இருந்­தது கண்டு அறி­யப்­பட்­டால் 14 நாள் இல்­லத் தனிமை உத்­த­ரவை அவர்­கள் பின்­பற்ற தேவை­யில்லை.

ஆனால் புதி­தாக வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இனி அட்­ட­வ­ணைப்­படி வழக்­க­மான பரி­சோ­தனை முறை­யைப் பின்­பற்­ற­வேண்­டும். அதன்­படி இரு­வா­ரங்­க­ளுக்கு ஒரு­முறை அவர்­கள் கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக்­கான பரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­வேண்­டும்.

வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ் தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களில் 11 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக நேற்று உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து, அங்கு வசிக்­கும் நூற்­றுக்­க­ணக்­கான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அங்­கி­ருந்து நேற்று வெளி­யேற்­றப்­பட்டு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இதற்­கி­டையே, அதே தங்­கு­வி­டு­தி­யில் மேலும் 17 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அங்கு வசிக்­கும் 35 வயது பங்­ளா­தேஷ் ஊழி­ய­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது உறு­தி­யா­ன­தும் அந்­தத் தங்குவிடு­தி­யில் சிறப்பு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டன.

இந்­தச் சிறப்பு மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளின் மூலம் 17 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்ட 17 பேரும் உட­ன­டி­யாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு தேசிய தொற்­று­நோய் நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

இவர்­க­ளுக்கு ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு தற்­போது மீண்­டும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றதா என்­பதை கண்­ட­றிய அமைச்­சும் நிபு­ணர்­கள் குழு­வும் விசா­ரணை நடத்­து­கின்­றன.

இந்­நி­லை­யில், தங்­கு­வி­டு­தி­

யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட ஊழி­யர்­கள் மற்ற இடங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். பேலஸ்­டி­யர் சாலை­யில் உள்ள குவா­லிட்டி ஹோட்­டல் மார்­லோ­வில் சிலர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

240 அறை­க­ளைக் கொண்ட அந்த ஹோட்­டல் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டி­ருப்­ப­தாக இணை­யத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் தெரி­வித்­தது.

வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ் தங்கு­வி­டு­தி­யில் வசிக்­கும் ஊழி­யர்­கள் சிலரை ஏறத்­தாழ 15 பேருந்­து­கள் குவா­லிட்டி ஹோட்­டல் மார்­லோ­வில் நேற்று காலை இறக்­கி­விட்­டன. வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ் தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் 17 பேரைத் தவிர்த்து, நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி மேலும் 24 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 60,904ஆக அதி­க­ரித்­துள்­ளது.

சமூக அள­வில் ஒரு­வ­ருக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கு­வி­டு­தி­யில் புதி­தாக ஒரு­வ­ருக்கு கொரோனா பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மற்­ற­வர்­கள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள்.

சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்­க­ளுக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.